என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கடலூரில் பேசுகிறார்
Byமாலை மலர்20 Jan 2018 6:43 AM GMT (Updated: 20 Jan 2018 6:43 AM GMT)
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஜனவரி 25-ந்தேதி அன்று தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி கடலூரில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1938-ம் ஆண்டு சென்னை ராஜதானியில் அன்னை தமிழை பணியவைக்க இந்தி படையெடுத்து வந்தது. இயக்க தளகர்த்தர்கள் ஆதிக்க இந்திக்கு எதிராக போர்முரசு கொட்டி களமிறங்கினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தமிழ் இளைஞர்கள் தாளமுத்து, நடராஜன், என்ற இரு சிங்கங்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள்.
1964-ம் ஆண்டு ஆதிக்க இந்தி தமிழகத்தில் தன் வெறியாட்டத்தை மீண்டும் காண்பித்தது. தமிழகம் கொதித்தெழுந்து மாணவர்கள் போராட்டமாக மாறியது.
அப்போது கீழப்பழுவர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன் உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வருகிற 25-ந்தேதி வீரவணக்கம் செலுத்துவோம்.
ஆலம் விழுதாக உள்ள மாணவர் அணி தனது கடமைகளில் ஒன்றாக, ஜனவரி 25-ந்தேதி அன்று தியாகிகளின் துயிலிடங்களில் அஞ்சலி செலுத்தி நாடெங்கிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.
25-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுபவர்கள் விவரம் வருமாறு:-
கடலூர் - மு.க.ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இள.புகழேந்தி,
சேலம்- வி.பி.துரைசாமி,
புதுக்கோட்டை -கனிமொழி எம்.பி., பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ.
ஈரோடு -டி.ஆர்.பாலு, சு.முத்துசாமி
திருச்சி -டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கே.என்.நேரு எம்.எல்.ஏ.
ஆனையூர் (மதுரை) -ஆ.ராசா, கம்பம் ராமகிருஷ்ணன், பெ.மூர்த்தி எம்.எல்.ஏ.
எழும்பூர் -தயாநிதி மாறன், பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.
சிவகங்கை -எல்.கணேசன்
எடப்பாடி- பொ.முத்து ராமலிங்கம்.
காஞ்சீபுரம் -சுப.வீர பாண்டியன், க.சுந்தர் எம்.எல்.ஏ.
அரக்கோணம் -க.சுந்தரம்,
தஞ்சாவூர் -பழ.கருப்பையா, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.
நாமக்கல் -மு.பெ.சாமிநாதன்
திருச்செந்தூர் -வி.பி. ராஜன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ.
திருப்பத்தூர் (வேலூர்) -புலவர் இந்திரகுமாரி
தாம்பரம் -சபாபதி மோகன், தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.
குமாரபாளையம் -கரூர் ம.சின்னசாமி
ஜெயங்கொண்டம் -டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ.
பட்டுக்கோட்டை -குத்தாலம் பி.கல்யாணம்
ஆத்தூர் (சேலம்) -கே.பி. ராமலிங்கம்
மாதவரம் -புதுக்கோட்டை விஜயா, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ.
திருவொற்றியூர் -விஜயா தாயன்பன்.
கள்ளக்குறிச்சி -நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்.எல்.ஏ.
திருவேற்காடு-வி.பி.ஆர்.இளம்பரிதி,
சோழிங்கநல்லூர் -மனுஷ்யபுத்திரன், மா. சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. #TamilNews
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1938-ம் ஆண்டு சென்னை ராஜதானியில் அன்னை தமிழை பணியவைக்க இந்தி படையெடுத்து வந்தது. இயக்க தளகர்த்தர்கள் ஆதிக்க இந்திக்கு எதிராக போர்முரசு கொட்டி களமிறங்கினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தமிழ் இளைஞர்கள் தாளமுத்து, நடராஜன், என்ற இரு சிங்கங்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள்.
1964-ம் ஆண்டு ஆதிக்க இந்தி தமிழகத்தில் தன் வெறியாட்டத்தை மீண்டும் காண்பித்தது. தமிழகம் கொதித்தெழுந்து மாணவர்கள் போராட்டமாக மாறியது.
அப்போது கீழப்பழுவர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன் உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வருகிற 25-ந்தேதி வீரவணக்கம் செலுத்துவோம்.
ஆலம் விழுதாக உள்ள மாணவர் அணி தனது கடமைகளில் ஒன்றாக, ஜனவரி 25-ந்தேதி அன்று தியாகிகளின் துயிலிடங்களில் அஞ்சலி செலுத்தி நாடெங்கிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.
25-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுபவர்கள் விவரம் வருமாறு:-
கடலூர் - மு.க.ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இள.புகழேந்தி,
சேலம்- வி.பி.துரைசாமி,
புதுக்கோட்டை -கனிமொழி எம்.பி., பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ.
ஈரோடு -டி.ஆர்.பாலு, சு.முத்துசாமி
திருச்சி -டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கே.என்.நேரு எம்.எல்.ஏ.
ஆனையூர் (மதுரை) -ஆ.ராசா, கம்பம் ராமகிருஷ்ணன், பெ.மூர்த்தி எம்.எல்.ஏ.
எழும்பூர் -தயாநிதி மாறன், பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.
சிவகங்கை -எல்.கணேசன்
எடப்பாடி- பொ.முத்து ராமலிங்கம்.
காஞ்சீபுரம் -சுப.வீர பாண்டியன், க.சுந்தர் எம்.எல்.ஏ.
அரக்கோணம் -க.சுந்தரம்,
தஞ்சாவூர் -பழ.கருப்பையா, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.
நாமக்கல் -மு.பெ.சாமிநாதன்
திருச்செந்தூர் -வி.பி. ராஜன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ.
திருப்பத்தூர் (வேலூர்) -புலவர் இந்திரகுமாரி
தாம்பரம் -சபாபதி மோகன், தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.
குமாரபாளையம் -கரூர் ம.சின்னசாமி
ஜெயங்கொண்டம் -டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ.
பட்டுக்கோட்டை -குத்தாலம் பி.கல்யாணம்
ஆத்தூர் (சேலம்) -கே.பி. ராமலிங்கம்
மாதவரம் -புதுக்கோட்டை விஜயா, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ.
திருவொற்றியூர் -விஜயா தாயன்பன்.
கள்ளக்குறிச்சி -நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்.எல்.ஏ.
திருவேற்காடு-வி.பி.ஆர்.இளம்பரிதி,
சோழிங்கநல்லூர் -மனுஷ்யபுத்திரன், மா. சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X