search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முசிறியில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    முசிறியில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

    முசிறியில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
    முசிறி:

    முசிறி பரிசல்துறைரோடு பகுதியை சேர்ந்தவர்  பாலசுப்ரமணியன்(45).  இவர் சொந்தமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ வைத்திருந்தார். கடந்த 30ந்தேதி இரவு பைபாஸ் ரோட்டிலிருந்து கைகாட்டி செல்வதற்காக துறையூர் ரோட்டில் வேகமாக ஆட்டோவை ஓட்டி வந்த போது தனியார் பள்ளி அருகே உள்ள வேகத் தடையில் திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. 

    இதில் தலையில் பலத்த  காயமடைந்த பாலசுப்ரமணியனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பழனியாண்டி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×