search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ கவிழ்ந்தது"

    • ஆட்டோவில் இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா உள்பட 4 பேர் பயணித்தனர்.
    • கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

    தென்காசி:

    தென்காசி மேலகரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்து சுப நிகழ்ச்சிக்காக உணவு ஏற்றிக்கொண்டு தென்காசி -அம்பை சாலையில் மத்தளம்பாறையை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

    ஆட்டோ கவிழ்ந்தது

    ஆட்டோவில் அந்த உணவகத்தில் வேலை பார்த்த மேல இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா(வயது 36) என்ற பெண் உள்பட 4 பேர் பயணித்தனர்.

    அங்கராயன்குளம் அருகே வந்தபோது எதிரே தென்காசியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    தலை நசுங்கி பலி

    இந்த விபத்தில் பொன் சேகா இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (21) என்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    • மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

    ராஜபாளையம்

    சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது.

    அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்து உள்ள ஆட்டையம்பாளைம் அருகே கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஸ்டீல் கடை அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது. இதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர் ஒடோடி வந்து ஆட்டோ டிரைவரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். ஒட்டுனர் சிறிது நேரத்திற்கு ஓய்வு எடுத்த பின்பு ஆட்டோவை ஒட்டி சென்றார். திடீரென நடு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அப்பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி அருகே இன்று அதிகாலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றிச்சென்ற லோடு ஆட்டோ நடு ரோட்டில் கவிழ்ந்தது
    • அந்த வழியாக வந்தவர்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவிற்குள் சிக்கியிருந்த சேக் முகமதுவை பத்திரமாக மீட்டனர்

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் ேசர்ந்தவர் சேக்முகமது (வயது 35). இவர் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு பஞ்சப்பூர் வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பஞ்சப்பூர் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

    பின்னர் சாலையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவிற்குள் சிக்கியிருந்த சேக் முகமதுவை பத்திரமாக மீட்டனர்.

    அதிஷ்டவசமாக லோடு ஆட்டோ டிரைவர் சேக்முகமதுவிற்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

    மேலும் இதுகுறித்து திருச்சி தெற்கு புலனாய்வு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரனை நடத்தினார்கள்.

    நாகையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகையை அடுத்த நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது 35). ஆறுமுகம் மனைவி சுமித்ரா(35). புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி(30). ரத்தினவேல் மனைவி ஜெயபிரியா(35). ரமேஷ் மனைவி இன்பவள்ளி(36). இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்.

    இன்று காலை நாகையில் இருந்து லோடு ஆட்டோவில் மீன் ஏற்றிக் கொண்டு வாஞ்சூரில் விற்பதற்காக வந்துள்ளனர். லோடு ஆட்டோவை மேலவாஞ்சூர் ஆசாரி தெரு பக்கரி சாமி மகன் நாகராஜ்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் லோடு ஆட்டோ வந்தபோது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால் பண்ணைச்சேரி கீழத் தெரு சிவக்குமார் மகன் இசால் (வயது17) மீது மோதாமல் இருக்க நாகராஜ் பிரேக் போட்டுள்ளார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது. நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கலா உள்பட 5 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜ், இசால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×