search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto overturned"

    • கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது.

    அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்து உள்ள ஆட்டையம்பாளைம் அருகே கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஸ்டீல் கடை அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது. இதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர் ஒடோடி வந்து ஆட்டோ டிரைவரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். ஒட்டுனர் சிறிது நேரத்திற்கு ஓய்வு எடுத்த பின்பு ஆட்டோவை ஒட்டி சென்றார். திடீரென நடு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அப்பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
    • வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது42), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

    அருப்புக்கோட்டை பந்தல்குடி மெயின் ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்ப சாமி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை ஜீவாநகர் திருமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது40). இவர் சம்ப வத்தன்று உறவினர்களுடன் குற்றாலம் சென்று விட்டு வேனில் அருப்புக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் கோவில்-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது வேனின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து அருப்புக் கோட்டை போலீசார் விசா ரணை நடத்தி வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஆட்டோ கவிழ்ந்து விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட சமுத்திரம் ஊராட்சி பகுதியில் இருந்து இன்று காலை 6 பெண்கள் ஷூ கம்பெனிக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றனர்.

    அப்போது ஆட்டொ சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த அம்மு வயது (40) என்பவர் படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×