என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைதான 3 பேரையும் படத்தில் காணலாம். கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710311538134770_Vyasarpadi-hotel-owner-attack-3-rowdy-arrest_SECVPF.gif)
X
கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.
வியாசர்பாடியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு: 3 ரவுடிகள் கைது
By
மாலை மலர்31 Oct 2017 10:08 AM GMT (Updated: 31 Oct 2017 10:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வியாசர்பாடியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், புதுநகரில் ஓட்டல் நடத்தி வருபவர் தனபால். இவரது கடைக்கு வந்து சாப்பிட்ட 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
இதனை தனபால் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் தனபாலை தாக்கி ரூ.1,200-யை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் வியாசர்பாடி பி.வி.காலனியில் 3 வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த கலைச்செல்வன், செங்குன்றத்தை சேர்ந்த சதீஷ், வியாசர்பாடி மணிகண்டன் என்பதும் அவர்கள் ஓட்டல் உரிமையாளர் தனபாலை தாக்கி பணம் பறித்ததும் தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கலைச்செல்வன், சதீஷ் மீது கொலை வழக்குகள் உள்ளன.
கைதான 3 பேரிடம் இருந்து 3 கத்தி, மோட்டார் சைக்கிள், ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், புதுநகரில் ஓட்டல் நடத்தி வருபவர் தனபால். இவரது கடைக்கு வந்து சாப்பிட்ட 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
இதனை தனபால் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் தனபாலை தாக்கி ரூ.1,200-யை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் வியாசர்பாடி பி.வி.காலனியில் 3 வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த கலைச்செல்வன், செங்குன்றத்தை சேர்ந்த சதீஷ், வியாசர்பாடி மணிகண்டன் என்பதும் அவர்கள் ஓட்டல் உரிமையாளர் தனபாலை தாக்கி பணம் பறித்ததும் தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கலைச்செல்வன், சதீஷ் மீது கொலை வழக்குகள் உள்ளன.
கைதான 3 பேரிடம் இருந்து 3 கத்தி, மோட்டார் சைக்கிள், ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)