search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.

    வியாசர்பாடியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு: 3 ரவுடிகள் கைது

    வியாசர்பாடியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், புதுநகரில் ஓட்டல் நடத்தி வருபவர் தனபால். இவரது கடைக்கு வந்து சாப்பிட்ட 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.

    இதனை தனபால் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் தனபாலை தாக்கி ரூ.1,200-யை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வியாசர்பாடி பி.வி.காலனியில் 3 வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த கலைச்செல்வன், செங்குன்றத்தை சேர்ந்த சதீஷ், வியாசர்பாடி மணிகண்டன் என்பதும் அவர்கள் ஓட்டல் உரிமையாளர் தனபாலை தாக்கி பணம் பறித்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கலைச்செல்வன், சதீஷ் மீது கொலை வழக்குகள் உள்ளன.

    கைதான 3 பேரிடம் இருந்து 3 கத்தி, மோட்டார் சைக்கிள், ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×