search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே வீடு அருகே நடைபயிற்சி சென்ற பெண் டாக்டரிடம் 10 பவுன் நகை பறிப்பு
    X

    கோவை அருகே வீடு அருகே நடைபயிற்சி சென்ற பெண் டாக்டரிடம் 10 பவுன் நகை பறிப்பு

    வீடு அருகே நடைபயிற்சி சென்ற பெண் டாக்டரிடம் 10 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் கொங்கு நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சுந்தராம்மாள். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை வீடு அருகே நடை பயிற்சி சென்றார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் சுந்தராம்பாள் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தராம்பாள் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டு உள்ளது. அதில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒண்டிப்புதூரை அடுத்த மீனாட்சியம்மன் நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(58). ஆடிட்டர். இவரது மனைவி பத்மாவதி(53) கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு பஸ்சில் திரும்பினார். வீடு அருகே வந்த போது அவ்வழியாக வந்த 25 வயது மதிக்கத்க்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் பத்மாவதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைபறித்த வாலிபர் முகத்தை துணியால் மறைத்திருந்ததாக பத்மாவதி கூறினார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×