search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அரசு பள்ளியில் திருட்டு
    X

    பொள்ளாச்சி அரசு பள்ளியில் திருட்டு

    பொள்ளாச்சி அரசு பள்ளியில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,மே.12-

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி செம்பேகவுண்டர் காலனியில் பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று இந்த பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தலைமை ஆசிரியர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் அறையில் இருந்த கம்ப்யூட்டர், டி.வி.டி. பிளேயர், டி.வி., தண்ணீர் சுத்தபடுத்தும் கருவி ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சாந்த லட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×