search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே 2 வாலிபர்கள் பலி: விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் கைது
    X

    கடையநல்லூர் அருகே 2 வாலிபர்கள் பலி: விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் கைது

    • மணிகண்டன் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார்.
    • எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடையநல்லூர்:

    புளியங்குடி அருகே உள்ள மேலப்புளியங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நண்பரான அருண்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு குற்றாலத்திற்கு சென்றபோது சொக்கம்பட்டி போலீஸ் நிலையம் அருகே எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த அருண்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் இறந்தனர்.இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருவேங்கடத்தை சேர்ந்த மாவீரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×