என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களை பற்றிய தி.மு.க.வின் பார்வை வெளிப்பட்டுள்ளது- குஷ்பு கருத்து
Byமாலை மலர்29 March 2021 6:02 AM GMT (Updated: 29 March 2021 6:02 AM GMT)
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை எல்லா பெண்களும் யோசிக்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆ.ராசாவின் கருத்துக்கு நடிகை குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் பெண்களை பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது புதிதல்ல. முதல்வரின் தாயை ஆ.ராசா மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வினரிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எதிர்பார்க்க முடியும்.
அவர்கள் பார்வையில் பெண்கள் என்றால் அப்படித்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் லியோனி பெண்களின் இடுப்பை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலினும் மிகவும் மோசமாக பேசி வருகிறார். பெண்களை இவ்வளவு கண்ணியக் குறைவாக பேசும் இவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்களாம்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை எல்லா பெண்களும் யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆ.ராசாவின் கருத்துக்கு நடிகை குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் பெண்களை பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது புதிதல்ல. முதல்வரின் தாயை ஆ.ராசா மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வினரிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எதிர்பார்க்க முடியும்.
அவர்கள் பார்வையில் பெண்கள் என்றால் அப்படித்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் லியோனி பெண்களின் இடுப்பை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலினும் மிகவும் மோசமாக பேசி வருகிறார். பெண்களை இவ்வளவு கண்ணியக் குறைவாக பேசும் இவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்களாம்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை எல்லா பெண்களும் யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X