என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி... பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கடும் தாக்கு
Byமாலை மலர்21 March 2021 2:10 PM GMT (Updated: 21 March 2021 2:10 PM GMT)
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வாய்ப்பே இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற புத்தகத்தை பாஜக இன்று வெளியிட்டது. புத்தகத்தை கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என்று கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடும் கேள்விக்கே இடமில்லை என்ற அவர், அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக நடத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார்.
தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விரைவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பல்வேறு பாஜக மேல்மட்ட தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர் என்றும், பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றும் சி.டி.ரவி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வி.கே.சிங், கட்சியின் மூத்த தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X