search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பேரம் பேசும் வலிமை இல்லை- திருமாவளவன்

    5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம், எனக்கு பேரம்பேசும் வலிமை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும், மதவாத சக்தியை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற அடிப்படையில் தொகுதிகளை விடுதலை சிறுத்தை ஏற்றுக்கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தை தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறினார்.

    இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, 

    5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம், எனக்கு பேரம்பேசும் வலிமை இல்லை. அதிமுக, பாஜகவுடன் போக முடியும் என எண்ணி இருந்தால் இதைகாட்டி பேரம் பேசியிருக்க முடியும். வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது. 

    நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை, 6 எம்எல்ஏக்களை வாங்கியுள்ளோம். சம்பந்தமில்லாமல் எனக்கு கோபம் வராது. நான் கோபப்பட்டால் அதில் நியாயம் இருக்கும் என்றார்.
    Next Story
    ×