என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் நல்வாழ்வுக்கு பல்வேறு செயல்திட்டங்கள்- கமல்ஹாசன் அறிவிப்பு
Byமாலை மலர்3 March 2021 10:24 AM GMT (Updated: 3 March 2021 10:24 AM GMT)
பெண்கள் நல்வாழ்வுக்கு பல்வேறு செயல்திட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெண்கள் நல்வாழ்வுக்கு 7 செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
* அரசு சேவையில் இருக்கும் சீருடைத்துறையில் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
* துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவில் தங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசரகால இலவச விடுதிகள் அமைக்கப்படும்.
* பெண்களால்... பெண்களுக்காக... பெண்களுக்கென்று... இயங்கும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும்.
* தனித்து வாழும் தாய்மார்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
* ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை பெண்களுக்கு இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்படும்.
* மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
* பட்டதாரிகளுக்கு வசிப்பிடத்தில் இருந்து 100 சதுர கி.மீ. தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.
* மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மையை ஊக்குவிக்க ஆரோக்கியமான தமிழகம் இயக்கம் தொடங்கப்படும்.
* ஒலிம்பிக் வீரர்களை வெளிக்கொண்டுவர ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெண்கள் நல்வாழ்வுக்கு 7 செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
* அரசு சேவையில் இருக்கும் சீருடைத்துறையில் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
* துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவில் தங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசரகால இலவச விடுதிகள் அமைக்கப்படும்.
* பெண்களால்... பெண்களுக்காக... பெண்களுக்கென்று... இயங்கும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும்.
* தனித்து வாழும் தாய்மார்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
* ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை பெண்களுக்கு இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்படும்.
* மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
* பட்டதாரிகளுக்கு வசிப்பிடத்தில் இருந்து 100 சதுர கி.மீ. தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.
* மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மையை ஊக்குவிக்க ஆரோக்கியமான தமிழகம் இயக்கம் தொடங்கப்படும்.
* ஒலிம்பிக் வீரர்களை வெளிக்கொண்டுவர ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X