search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை மறுநாள் பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
    X
    நாளை மறுநாள் பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

    பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு

    சட்டசபை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

    சென்னையில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

    திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் பாமக தேர்தல் அறிக்கை 5ந்தேதி வெளியாகிறது.


    Next Story
    ×