search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் - மு.க.ஸ்டாலின்
    X

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் - மு.க.ஸ்டாலின்

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-



    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

    அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK


    Next Story
    ×