search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horse Trading"

    • சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது.
    • தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது. மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் இதை உச்சநீதிமன்றம் பயன்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் நடத்திய அதிகாரி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவித்த நிலையில் அதை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு தேவையான இடங்களுக்கு பாதிக்குக் கீழ்தான் இருந்துள்ளது ஆனாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு பதிவான 8 வாக்குச் சீட்டுகளை எடுத்து வேண்டுமென்றே தேர்தல் நடத்தி அதிகாரி சுயநினைவுடன் சிதைத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப்படையாக ஒரு தவற்றைச் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறிவிட்டு மிக தைரியமாக இருக்கிறார் என்றால் இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை? எனவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக தேர்தல் அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்க வேண்டுமென உத்தரவு.

    • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி நேற்று(பிப் 19) உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்றே (பிப் 18) சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "சண்டிகரில் நடைபெறும் குதிரைப்பேரம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் ,மீண்டும் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளனர். #Kumaraswamy #KarnatakaPolitics
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தது.

    இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் நேரடியாகவே மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபடும் பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.எஸ். கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதில் எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடாவை பா. ஜனதா கட்சியினர் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி கொடுப்பதாக பேரம் பேசி உள்ளனர். இதேபோல் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி, சீனிவாசமூர்த்தி, தேவானந்த சவுகான், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி. நாகராஜ், சிவள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி, ரகீம்கான் உள்ளிட்டோரிடமும் பா.ஜனதா கட்சியினர் பேரம் பேசி இருக்கிறார்கள்.

    எனவே குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரே‌ஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். எம்.எல்.எ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



    இதில் எம்.எல்.ஏக்களுடன் பா. ஜனதா நடத்திய குதிரை பேரம் தொடர்பான ஆடியோ-வீடியோ சிக்கி இருப்பதாகவும் அதை வைத்து எம்.எல்.ஏ.க்கள் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குமாரசாமி யோசனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குமாரசாமி போனில் பேசினார். குதிரை பேர வீடியோ தன்னிடம் சிக்கி இருப்பதாகவும் இதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி பணிந்தனர். இதனால் தற்காலிகமாக குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி நீங்கியது.

    இதேபோல் காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக் களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹாசனில் இன்று (சனிக்கிழமை) மாலை ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், கூட்டணி அரசுக்கு எழுந்து உள்ள சிக்கல் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள குமாரசாமி விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #Kumaraswamy #KarnatakaPolitics
    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-



    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

    அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK


    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்காக பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

    இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் வர தாமதம் ஆனது. இது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களுடன் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், யாருக்கும் அதிருப்தி இல்லை என்றார்.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்திருப்பதாக மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமியும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
    ×