search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aam admi"

    • சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது.
    • தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது. மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் இதை உச்சநீதிமன்றம் பயன்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் நடத்திய அதிகாரி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவித்த நிலையில் அதை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு தேவையான இடங்களுக்கு பாதிக்குக் கீழ்தான் இருந்துள்ளது ஆனாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு பதிவான 8 வாக்குச் சீட்டுகளை எடுத்து வேண்டுமென்றே தேர்தல் நடத்தி அதிகாரி சுயநினைவுடன் சிதைத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப்படையாக ஒரு தவற்றைச் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறிவிட்டு மிக தைரியமாக இருக்கிறார் என்றால் இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை? எனவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக தேர்தல் அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்க வேண்டுமென உத்தரவு.

    • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி நேற்று(பிப் 19) உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்றே (பிப் 18) சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "சண்டிகரில் நடைபெறும் குதிரைப்பேரம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் ,மீண்டும் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    • சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்பு.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.

    தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து மீட்டெடுப்புகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவலின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

    • ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்துவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • டெல்லியில் உள்ள மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் மாற்றங்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர் பணி முறைப்படுத்தியதற்காக அம்மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    மாநிலத்தில் அரசு வேலைகள் குறைந்து, ஒப்பந்த ஆசிரியர்களை அதிகளவில் நியமித்து வந்த வேளையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 8,736 ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

    டெல்லியில் ஒப்பந்தம் மற்றும் வழக்கமான ஆசிரியர்களின் முயற்சியால் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்துவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    டெல்லியில் உள்ள மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அனைத்து மாநில அரசுகளும் ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இதேபோல், ஆம் ஆத்மி அரசு எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அங்கெல்லாம் ஒப்பந்த பணியாளர்களின் பணி முறைப்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி சார்பில் உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள்.
    • டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் கல்வி, ஆயத் தீர்வை உள்ளிட்ட இலாக்காக்களை கவனித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு டெல்லியில் கொண்டுவரப்பட்ட கலால்வரி கொள்கைப்படி மதுபானம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபான நிறுவனங்கள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வழங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

    இந்த முறைகேடு தொடர்பாக சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள்.

    இந்தநிலையில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    கலால் வரி கமிஷனர் அர்வா கோபி கிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி உதவி கமிஷனர் பங்கஜ் பட்னார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்து இருந் தார். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான இன்டோ ஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண் இ யக்குனர் சமீர் மகேந்து உள்பட பலரிடம் சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.

    கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் தந்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ‘சீட்’ வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் தற்போதைய எம்.பி.யும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பர்வேஷ் வர்மாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர், பல்பீர் சிங் ஜாக்கர்.

    இவர் ‘சீட்’ வாங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை எழுப்பி இருப்பவர், வேறு யாருமல்ல; வேட்பாளரின் மகன் உதய் ஜாக்கர்.

    ஆனால் இந்தப் புகாரை பல்பீர் சிங் ஜாக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இதையொட்டி அவர் கூறுகையில், “ இந்தப் புகாருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி என் மகனிடம் எதுவும் விவாதிக்கவில்லை. நான் அவரிடம் பேசுவதே மிகவும் அபூர்வம். அவர் பிறந்த நாளில் இருந்து தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து வருகிறார். நான் என் மனைவியை 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். அவர் என்னுடன் 6 அல்லது 7 மாதம்தான் சேர்ந்து வாழ்ந்தார்” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “அரசியல் கட்சிகளில் உள்ள சமூக விரோத சக்திகள் என் மகனின் அறிக்கைக்கு பின்னால் உள்ளன” எனவும் கூறி உள்ளார்.

    இருப்பினும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை பா.ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

    இதையொட்டி அந்தக் கட்சியின் டெல்லி தலைவர் பிரவிண் காண்டல்வால் கூறும்போது, “கணக்கில் வராத பணம், தேர்தலில் பயன்படுத்தப்படுவது தொடர்பான முக்கிய விவகாரம் இது. இதில் கெஜ்ரிவாலையும், அவரது குழுவினரையும் அம்பலப்படுத்த வேண்டும். லஞ்சத்தைப் பெற்றதற்கும், தவறான வழிகளில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் இது செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

    அத்துடன் இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், பல்பீர்சிங் ஜாக்கர் உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    உதய் ஜாக்கர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இன்று தேர்தல் நடக்கிற நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்பீர் சிங் ஜாக்கர் லஞ்சம் ரூ.6 கோடி தந்தார் என்ற புகாரை, அவரது மகனே எழுப்பி இருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் என ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவானது ஆம் ஆத்மி கட்சி.

    ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ல் ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக நாளை டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது.



    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேற்கு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக எனது தந்தை பல்பீர் சிங் ஜாகர் போட்டியிடுகிறார். எனது தந்தை கட்சியில் சேர்ந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அங்கு போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நானே சாட்சி என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளரின் மகன் இப்படி பகிரங்கமாக பேட்டியளித்தது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் மகனது குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக டெல்லியில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

    6வது கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற கட்சிகளின் தலைவர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். 



    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 164 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கு ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரெயில் நிலையம் அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது.
    டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. 

    இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

    மத்திய மந்திரி நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ArvindKejriwal #RahulGandhi
    பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    புதுடெல்லி:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

    இதுதொடர்பாக, கெஜ்ரிவால் பேசுகையில், அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். மேலும், ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து 40 சிபிஐ அதிகாரிகளை அனுப்பி தேர்வு செய்யப்பட்ட அரசுகள் மீது தாக்குதல் நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் போல் டெல்லி மற்றும் கொல்கத்தாவை கைப்பற்ற கனவு கண்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.



    இதேபோல், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாம் இப்போது அபாயத்தில் உள்ளோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் ஒன்றுபட  வேண்டும். ஏனென்றால், நமக்கு இது கடைசி தேர்தலாகும். நாளை முதல் அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெறக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து முக்கிய தலைவர் அசுதோஸ் விலகிய நிலையில், மற்றொறு முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பத்திரிகையாளராக இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றிய அவர் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

    இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன். குடும்பம் மற்றும் நண்பர்கள் கருத்தை கேட்ட பின்னர் தற்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என கேதன் கூறியுள்ளார். சமீபத்தில், மற்றொரு முக்கிய தலைவரான அசுதோஸ் விலகிய நிலையில், கேதனும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×