என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • யார் இந்தியா திரும்ப விரும்புகிறார்களோ, அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
    • இந்திய-வங்கதேச எல்லை எதுவும் மூடப்படக் கூடாது. மூடப்படும் என்றால், நாம் அது தொடர்பாக தகவல் கொடுக்க வேண்டும்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மைனாரிட்டிகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். மேலும் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களை இங்கு அழைத்து வர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    எங்களுடைய கோரிக்கை எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நடவடிக்கை என்பதின் அர்த்தம் என்ன? அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களில் யார் இந்தியா திரும்ப விரும்புகிறார்களோ, அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    இந்திய-வங்கதேச எல்லை எதுவும் மூடப்படக் கூடாது. மூடப்படும் என்றால், நாம் அது தொடர்பாக தகவல் கொடுக்க வேண்டும். அதுபோன்ற தகவல் நாம் கொடுக்க முடியாது. இது அனைத்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு மைனாரிட்டியை பாதுகாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    ஏராளமான மக்கள் எல்லை வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களால் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் அவர்கள் நிறுத்தப்படவில்ல. விமானம் மூலம் வருகிறார்கள். விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் வந்து கொண்டிக்கிறார்கள். விசா மற்றும் பாஸ்போர்ட் வைத்துள்ளர்கள் வருகிறார்கள். இது நிறுத்தப்படவில்லை.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வன்முறையை தொடங்கவில்லை.
    • பெங்காலில் மோசமான நிலை உருவாகும் வகையில் எந்த வகையான கருத்துகளையும் நாம் தெரிவிக்கக் கூடாது.

    வங்கதேசத்தில் மைனாரிட்டி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துகனை கூறுவதை தவிர்க்க வேண்டும். மீடியாக்களும் ஆத்திரமூட்டும் வகையிலான வீடியோக்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி மேற்கு வங்க சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:-

    இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வன்முறையை தொடங்கவில்லை. சமூக விரோதிகள் வன்முறையை தொடங்கினர். பெங்காலில் மோசமான நிலை உருவாகும் வகையில் எந்த வகையான கருத்துகளையும் நாம் தெரிவிக்கக் கூடாது. வங்கதேசத்தில் நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும் இங்கே போராட்டம் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இது நம்முடைய மதசார்பற்ற தன்மையை காட்டுகிறது.

    மைனாரிட்டி தலைவர்கள் பேரணி மேற்கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு பேரணி மேற்கொள்ள வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை ஏராளமானோர் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் மற்றொரு வன்முறையை தொடங்குவார்கள். நாம் வன்முறையை விரும்பவில்லை. நாம் அமைதியை விரும்புகிறோம். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரே இரத்தம் கொண்டவர்கள்.

    மீடியாக்களுக்கு தடை விதிக்கவும், மீடியா நபர்களை கைது செய்யவும் இது உத்தர பிரதேசம் அல்லது ராஜஸ்தான் கிடையாது. ஏராளமான போலி வீடியோக்கள் உலாவி வருகின்றன. அரசியல் கட்சி எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது உங்களுடைய மாநிலம் மற்றும் நண்பர்களை பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளு்ஙகள் என்பதை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    வங்கதேசத்தில் இருந்து எல்லை கடந்து இந்தியாவுக்குள் வருவதை எல்லை பாதுகாப்புப்படை கவனித்துக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக நாம் கருத்து கூற இயலாது. பணம் உள்ளவர்கள் விமானங்கள் அல்லது ரெயில்களில் வருகிறார்கள். ஆனால் ஏழைகள் அவ்வாறு வர இயலாது. நாம் எல்லையை கட்டுப்படுத்த முடியாது. அதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். இது வெளியுறவுத்துறை விவகாரம். நாம் தலையிட முடியாது.

    அதேவேளையில் எல்லைக்கு அங்கே இருக்கும் பெங்காலிக்காக உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

    பெங்கால், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களை டாக்கா உரிமை கொண்டாடும் என வங்கதேச கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் இரண்டு வங்கதேச மூத்த ராணுவ வீரர்கள், இரண்டு மூன்று நாட்களுக்குள் ராணுவ வீரர்கள் பெங்காலை ஆக்கிரமித்து விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். நீங்கள் பெங்கால், பீகார், ஒடிசாவை ஆக்கிரமித்தால, நாங்கள் என்ன லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டிருப்போமா?. இதுபோன்ற நினைக்க வேண்டாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    வங்கதேச சூழ்நிலை தொடர்பாக பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் பேசும்போது மம்தா பானர்ஜி மேற்கண்ட கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    • முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது
    • சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்கத்தில் வீட்டில் நாடு வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மாமுன் மொல்லா என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    நேற்றிரவு பெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் மாமுன் மொல்லா, சகிருல் சர்க்கார் மற்றும் முஸ்தாகின் ஷேக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த வெடிவிபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.
    • மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேட்டார்

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரசை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன.

    தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சனைகளும் இருந்து வந்தது. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணிக்குத் தாவினார்.

    மேலும் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடி கொடுக்காமல் தள்ளியே இருந்தார்.

    ஆனாலும் மக்களவை தேர்தலில் கணிசமான அளவு வெற்றியைப் பதிவு செய்த இந்தியா கூட்டணி பாஜகவின் தனிப் பெரும்பாண்மை கனவை தகர்த்து கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் வெற்றி பெரும் அளவுக்கு இந்தியா கூட்டணி வலிமை பெறவில்லை.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியை விட்டு தள்ளியே இருந்த மம்தா, தற்போது கூட்டணிக்குத் தலைமை தாங்க தயார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

     

    கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் முன்னணிக்குத் தலைமை தாங்கவில்லை.

    முன்னணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் கண்டுகொள்வதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்று தெரிவித்தார்.

     வலுவான பாஜக-விரோத சக்தியாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நீங்கள் ஏன் இந்த கூட்டணிக்கு பொறுப்பேற்கவில்லை என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் வங்காளத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

    முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்குமாறு தெரிவித்த நிலையில் தற்போது மம்தாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் மகாராஷ்டிர சட்டமான்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் பெரு வெற்றி பெற்றது. இதை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம். முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
    • மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். இவரது உறவினர் (nephew) அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அக்கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மீடியா ஒன்று மம்தா பானர்ஜியிடம், உங்களுடைய அரசியல் வாரிசு யார்? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு மம்தா பானர்ஜி பதில் அளித்து கூறியதாவது:-

    மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். நாங்கள் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், பூத் பணியாளர்களை கொண்டுள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சியாகும். கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். இன்று புதிதாக வருபவர்கள் நாளை மூத்த தலைவர்கள் ஆவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு ஒழுக்கமான கட்சி. எந்தவொரு தனிநபரும் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட முடியாது.

    நான் என்பது கட்சியல்ல. நாங்கள்தான் கட்சி. இது ஒரு கூட்டு குடும்பம், மற்றும் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.

    • வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் சவுத் 24 ஜேநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 9 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முஸ்தகின் சர்தார் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். மறுநாள் காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உள்ளூர் வாசிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், போலீஸ் நிலைகளை சேதப்படுத்தினர்.

    சிறுமியின் சடலம் ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின் நடந்த இந்த மற்றொரு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கப்படும் என மம்தா உறுதியளித்தார்.

    அதன்படி மேற்கு வங்க போலீஸ் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் குற்றவாளி முஸ்தகின் சர்தார் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது

    விசாரணையின் போது 36 சாட்சிகள் ஆஜரான நிலையில், பருய்பூர் விரைவு நீதிமன்றம் நேற்று [வியாழக்கிழமை] முஸ்தாகின் சர்தாருக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் நடந்து 61 நாட்களில் மரண தண்டனை வழங்கப்படுவது மேற்கு வங்கத்தின் நீதித்துறை வரலாற்றில் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஒரு வழக்கில் தண்டனை அதுவும் மரண தண்டனை வழங்கப்படுவது மாநில வரலாற்றில் முதல் முன்னோடியாக அமைந்துள்ளது . இந்த சிறந்த சாதனைக்காக மாநில காவல்துறை மற்றும் வழக்குத் தொடர்பாக பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
    • பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.

    மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. துர்காபூர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில், பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

    • திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு.
    • புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார்.

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது பழமொழி. நமது இந்திய நாட்டு கலாசாரத்தின்படி திருமணம் பந்தத்தில் இணையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக தாலிகட்டும் நிகழ்வு கருதப்படுகிறது.

    திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் திருமணம் ஒன்று சமீபத்தில் நடந்தது.

    இதில் மணமகன் அலங்காரத்துடன் திருமணத்துக்கு தயாரான நிலையில் வாலிபர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். தாலி கட்டுவதற்கு மணமகளுக்காக அவர் காத்திருக்கும் சமயத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடினார். அருகே புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி ஒருசில நாட்களில் 4 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    • மேற்குவங்க சட்டமன்றத்தில் மம்தா உரையாற்றினார்
    • எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்கான் அமைப்பின் இந்து மதத் துறவிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வங்கதேசதுக்கு ஐநாவின் அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க [பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

     

    மேற்குவங்க சட்டமன்றத்தில் உரையாற்றிய மம்தா, எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர். இதில் இந்திய அரசு எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலகில் எங்கும் மத அடிப்படையில் நடக்கும் அட்டூழியங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

     

    வங்கதேசத்தில் இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது மக்களை நாம் மீட்டெடுக்க முடியும். இந்திய அரசு இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.ஐநா அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க ஆவன செய்ய பிரதமர் இதில் தலையிட வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். வங்கதேச மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
    • கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் இதை செயல்படுத்த வேண்டும்

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்துக்களைப் போராடத் தூண்டியதாகவும் பேரணியில் வங்கதேச கொடியை அவமதித்ததாகவும் இஸ்கான் இந்துமதத் தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரித்தது.

    இந்நிலையில் வங்கதேச மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாது என்று மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் மருத்துவமனை அறிவித்துள்ளது. வடக்கு கொல்கத்தாவின் மானிக்தலா பகுதியில் உள்ள ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

     

    இந்த முடிவு குறித்துப் பேசிய மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த், நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவதைப் பார்த்து, வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    ஆனால், அங்கு இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே பார்க்க முடிகிறது. எனவே கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    • தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்குவங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ராஜ் பவனில் தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு தனது திருவுருவ சிலை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

    இது தொடர்பாக பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ், "நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார். அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளார். அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? இது தன்னை தானே உயர்வாக நினைக்கும் மனப்பான்மை" என்று தெரிவித்தார்.

    • புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு ஆறு மாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. பிறந்த பச்சிளங் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கவ்விச்சென்றது.

    இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், உதவிக்காக பலமுறை அழைத்த விடுத்த போதிலும் எந்த ஊழியர்களும் தங்களுக்கு உதவ வரவில்லை என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அதனிடையே, மருத்துவமனையின் அலட்சியம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பிரதிமா பூமிக் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் உள்ள [பங்குராவில்] சோனாமுகியின் அதிர்ச்சிகரமான சம்பவம், மம்தா பானர்ஜியின் 'உலகத் தரம் வாய்ந்த' சுகாதாரத் தலைமையின் கீழ் உள்ள கடுமையான யதார்த்தத்தை அம்பலப்படுத்துவதாக கூறி பிறந்த குழந்தையை நாய் கவ்விக்கொண்டு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குறைந்த மாதத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×