search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Country bomb"

    • கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
    • உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
    • புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.

    புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர்.
    • சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாநகரருக்கு உட்பட்ட கரிமேடு விஸ்வசாபுரி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று இரவில் அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பதறியடித்து எழுந்தனர்.

    பின்னர் தங்களது வீட் டிற்கு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். முதலில் அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் வெடிச்சத்தம் கேட்ட அஜித்தின் வீட்டிற்குள் இருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்துள்ளது. மேலும் உடனடியாக இதுபற்றி அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். பின்னர் பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு மர்ம பொருள் வெடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்களும் சேதமடைந்து கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

    வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • மேய்ச்சலுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த சுண்ணாம் புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). விவசாயி. இவர் விவசாயம் செய்வ தோடு கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில், சுண்ணாம்பு பள்ளம் அருகே வனப்பகுதியை ஒட்டி யுள்ள நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே சுதாகர் தன்னுடைய பசு மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று கட்டியிருந்தார்.

    அப்போது காட்டுப்பன்றி களை வேட்டையாடுவதற்காக பூமியில் புதைத்து வைக்கப் பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை எதிர்பாராத விதமாக பசுமாடு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாட்டின் வாய்ப்பகுதி கிழிந்து காயமடைந்துள்ளது.

    வெடி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்காயம் போலீசார், ஆலங்காயம் வனத்துறையினர், மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.

    அதனேபேரில் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மாட்டிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வீடுகளில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடை–பெறலாம் என ஆரோ–வில் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். இதேபோல காத்தவராயன் வீட்டில் நடந்த சோதனையிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது.

    இதனைத்தொடர்ந்து காத்தவராயனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய 2 பேரும் எதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை அருகே இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால் சிறுவனின் பார்வை பறிபோன சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சந்தோஷ், கடந்த 15-ந்தேதி, மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரி புவனேஷ்வரியை (19) பார்க்க சென்றான். அப்போது அந்த தெருவில் நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தின்போது சிலர் பேன்சி கடைக்கு முன்பு நாட்டு வெடியை வைத்துள்ளனர்.

    அப்போது சிதறிய வெடி சிதறல்கள் கடைக்கு முன் நின்று கொண்டிருந்த சிறுவன் சந்தோசின் இடது கண்ணில்பட்டது. கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில், சிறுவன் வலியால் துடித்தான். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவனுக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறுவனின் சகோதரி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கென்னடி தெருவை சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நாட்டு வெடி வெடித்த சண்முகவேலையும் (23) அதனை வாங்கிய குணசேகரன் (24) என்பவரையும், அதை சட்டவிரோதமாக விற்ற செல்வகுமார் (35) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×