search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 arrest"

    • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.
    • 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது

    கோவை:

    கோவை சுந்தராபுரம் குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சோலை(46). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போத்தனூர் சாரதாமில் ரோட்டில் இறக்கி விட்டார்.

    பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் வந்த போது 3 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்தனர்.

    பின்னர் பூஞ்சோலையிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.

    இது குறித்து பூஞ்சோலை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், கத்தியை வைத்து மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்தது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த அஜீஷ் ரகுமான்(26), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அனீஷ்(22) மற்றும் போத்தனூர் மைல்கல்லை சேர்ந்த சயத் அபுதாகீர்(26) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சூளகிரி அருகே தங்கையின் கணவரை கொலை செய்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏனுசோனை அடுத்து பி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் சந்தோஷ் (வயது23). இவர் சூளகிரி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மீனா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தியாகரசன் பள்ளி-பி.கொத்தப்பள்ளி சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்மந்தமாக மீனாவின் அண்ணன் முருகேஸ் (25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தங்கையின் கணவர் சந்தோஷ் என்பவரை கொலை செய்தது ஒப்பு கொண்டார்.

    இது பற்றி முருகேஸ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-

    எனது தங்கை மீனா, சூளகிரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் நான் மீனாவை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் எனது தங்கை எங்களுடன் வரமாட்டேன் என்று கூறினார். இதனால் எனக்கு சந்தோஷ் மீது கோபம் இருந்தது.

    இந்த நிலையில் சந்தோசை கொலை செய்ய நண்பர்கள் மூலம் திட்டம் போட்டேன். நேற்று இரவு சரியான நேரத்தில் சந்தோஷ் தனியாக சென்றான். அப்போது அவரை நான் எனது நண்பர்கள் தொரப்பள்ளியை சேர்ந்த குமார் (24) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோசை குத்தி கொலை செய்ேதாம் என்றார்.

    இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கொலை செய்த முருகேஸ், குமார், 18 வயது வாலிபர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

    அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    அண்ணா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த வாரம் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயரான பிரவீன் என்பவர் அதிக போதையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இதனைத் மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து போதை விருந்து நிகழ்ச்சி நடத்திய 6 பேரை கைதுசெய்தனர்.

    இந்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தன.அவர் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(28), அவர் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான சாகுல் ஹமீத் (21),கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டது. அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

    கைது செய்யப்பட்ட இளம்பெண் டோக்கஸ் கல்லூரி மாணவி ஆவார். அவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களுக்கு போதை மாத்திரைகள் கிடைப்பது எப்படி? எங்கிருந்து வருகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சைதாப்பேட்டை அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.55 லட்சம் சொத்தை அபகரித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவருக்கு சொந்தமாக சைதாப்பேட்டை தாலூகா சீவரத்தில் 1,393 ச.அடி இடம் உள்ளது. இதில் 1,077 ச. அடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சண்முகம் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக நில மோசடி பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் மேரி ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சண்முகத்துக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக சித்ரா, கணேசன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


    சென்னை அருகே இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால் சிறுவனின் பார்வை பறிபோன சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சந்தோஷ், கடந்த 15-ந்தேதி, மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரி புவனேஷ்வரியை (19) பார்க்க சென்றான். அப்போது அந்த தெருவில் நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தின்போது சிலர் பேன்சி கடைக்கு முன்பு நாட்டு வெடியை வைத்துள்ளனர்.

    அப்போது சிதறிய வெடி சிதறல்கள் கடைக்கு முன் நின்று கொண்டிருந்த சிறுவன் சந்தோசின் இடது கண்ணில்பட்டது. கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில், சிறுவன் வலியால் துடித்தான். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவனுக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறுவனின் சகோதரி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கென்னடி தெருவை சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நாட்டு வெடி வெடித்த சண்முகவேலையும் (23) அதனை வாங்கிய குணசேகரன் (24) என்பவரையும், அதை சட்டவிரோதமாக விற்ற செல்வகுமார் (35) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஆய்குடி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    சுரண்டையை அடுத்த ஆய்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரகட்டில் வசித்து வரும் பத்துரோஸ் திரவியம் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த அல்ஹாஜன் (32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கனி (50) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

    மேலும் இந்த 3 பேரும் தென்காசி பகுதியில் 2 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

    புளியரை சோதனைச்சாவடியில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    செங்கோட்டை:

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்தனர்.

    இதில் கேரள மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 66), முருகன் (58), விருதுநகர் மாவட்டம் வையாபுரியைச் சேர்ந்த மற்றொரு முருகன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி அருகே கல்லட்டியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த விவசாயி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்தநிலையில் கல்லட்டியில் இருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது கல்லட்டியில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கல்லட்டி 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லட்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் (வயது 56) தனது நிலத்தில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. 10 செடிகள் 3 அடி உயரம் வளர்ந்து இருந்தன. போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து போலீசார் கஞ்சா பயிாிட்ட குணசேகரன் மற்றும் அதை பறித்து வந்த ஊட்டி அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், கூடலூரை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரனுக்கு கஞ்சா புகைக் கும் பழக்கம் உள்ளதால் தான் மட்டும் பயன்படுத்துவதற்காக தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை சட்ட விரோதமாக பயிரிட்டு உள்ளார். இதனை அறிந்த விஷ்ணு உள்பட 2 பேர் அவ்வப்போது கஞ்சா செடிகளை பறித்து காயவைத்து பயன்படுத்தினர். அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தில் தறி வேலை செய்து வருகின்றனர்.

    கஞ்சா செடிகளை பறித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குணசேகரன், விஷ்ணு ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
    கோவையில் பரபரப்பு தீபாவளி மது விருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி போதைக்காக மதுவுடன் ‘தின்னர்’ கலந்து குடித்தார்களா? விசாரணை கோவை-02

    கோவை,நவ.5-

    கோவை பாப்ப நாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் பார்த்தீபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (57). சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள் 3 பேரும் கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டித்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய, விடிய மது குடித்தனர். இரவு அங்கேயே படுத்து தூங்கினர். காலையில் எழுந்ததும் 3 பேரும் மீண்டும் மது குடித்தனர்.

    பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்தீபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் கள்ளச்சாரயம் குடித்து இறந்து இருக்கலாம் என அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த போது 3 பேரும் சாப்பிடாமல் இரவு முழுவதும் விடிய, விடிய மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் குடலில் இருந்து பெயிண்ட் அடிக்க கலக்கும் தின்னர் போன்ற ஒரு வாசனை வந்தது. எனவே அவர்கள் 3 பேரும் பெயிண்டர் என்பதால் போதைக்காக மதுவுடன் தின்னரை கலந்து குடித்தார்களா? என்பதற்காக அவர்களது உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவு வந்த உடன் அவர்கள் மதுவுடன் எதை கலந்து குடித்தார்கள் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    தீபாவளி பண்டிகை நாளில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. * * * பார்த்திபன் * * * முருகானந்தம் * * * சக்திவேல்

    முத்துப்பேட்டையில் இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முகாமிட்டு இந்து பிரமுகர் கொலை தொடர்பாக 3 பேரின் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக போலீசார் 80 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நடந்த ஒரு இந்து பிரமுகர் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக கீழக்கரை தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் முத்துப்பேட்டை பகுதி தென்னை மரைக்காயர் தெருவை சேர்ந்த சாஜித், நண்டு மரைக்காயர் தெருவை சேர்ந்த இம்தியாஸ், நெய்யக்கார தெருவை சேர்ந்த ரிஸ்வான் ஆகிய 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், இவர்கள் சதி திட்டம் தீட்ட முத்துப்பேட்டையில் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இதில் சிறையில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை வெளியே கொண்டு வரவும், இரு சமூகத்தினரிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் சதித்திட்டம் தீட்டியதாகவும் கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் அதிரடியாக சாஜித், இம்தியாஸ், ரிஸ்வான் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டைக்கு வந்த தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் ஒரு பிரிவுக்கு 20 போலீசார் வீதம் 4 பிரிவுகளாக மொத்தம் 80 போலீசாருடன் சென்று கீழக்கரை சம்பவத்தில் கைதான சாஜித், இம்தியாஸ், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளை அதிகாலை சுமார் 5 மணிக்கு சுற்றி வளைத்து அதிரடியாக வீடுகளுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஜான்ஜோசப், திருவாரூர் டி.எஸ்.பி. சங்கர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக 3 பேர் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது? என்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த சோதனை என்று உள்ளுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பகோணம் அருகே திருபுவனத்தில் முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மதமாற்ற விவகாரத்தில் நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருபுவனம் பகுதியில் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில், ராமலிங்கம் படுகொலை குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்துள்ளார்களா? என்று தெரியவில்லை. இதுபற்றி தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

    அதிகாலை துவங்கிய சோதனை காலை 10 மணியை கடந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ரம்ஜான் மாதம் என்பதால் அதிகாலையில் இஸ்லாமியர்கள் என்ன என்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக பதற்றத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அதேபோல் முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார், போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
    கும்பகோணம்பேட்டை புதுத்தெருவில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம்பேட்டை புதுத்தெருவில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் பேட்டை புதுத்தெரு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 50 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டில் நிரப்பி கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 40), வேல்முருகன் (35), தமிழ்செல்வன் (45) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் அரசலாறு வழிநடப்பை சேர்ந்த சாராய வியாபாரி அம்புரோஸ் ஏற்பாட்டில் சாராய பாக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்புரோசை தேடி வருகின்றனர். #tamilnews

    பரமத்திவேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் எஸ்.பி. அருளரசுவுக்கு, பரமத்திவேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி செல்ல முயல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் எஸ்.ஐ.க்கள் கொண்ட குழுவினர் பரமத்திவேலூர் அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சங்கர் என்பவரது இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு லாரியில் 5 யூனிட் அளவிலான மணல் சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து மோகனூர் ராசிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தர்மலிங்கம் (39), நன்செய் இடையாரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கேசவன்(22) மற்றும் ஈரோட்டை சேர்ந்த லாரி கிளீனர் கோபி (35) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் ஒரு லாரி, ஒரு ஜே.சி.பி.வாகனம் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    இதில் போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். தொடர்ந்து நன்செய் இடையாறு பகுதியில் அழகுநாச்சியம்மன் கோவில் அருகே சேகர் (45) என்பவரது இடத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்ல முயன்ற ஒரு லாரியை பறிமுதல் செய்து ஏற்கனவே தப்பி ஓடிய 2 பேர் உள்பட 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews

    ×