ஒரு விளம்பரம்.. தனது திருவுருவ சிலையை தானே திறந்து வைத்த மேற்குவங்க கவர்னர்

தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
ஒரு விளம்பரம்.. தனது திருவுருவ சிலையை தானே திறந்து வைத்த மேற்குவங்க கவர்னர்
Published on

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்குவங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ராஜ் பவனில் தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு தனது திருவுருவ சிலை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இது தொடர்பாக பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ், "நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார். அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளார். அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? இது தன்னை தானே உயர்வாக நினைக்கும் மனப்பான்மை" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com