என் மலர்
மேற்கு வங்காளம்
- சியால்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது.
- விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டது. தண்டனை விவரம் வரும் 20-ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சஞ்சாய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சஞ்சய் ராயின் சகோதரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி அவர் தண்டிக்கப்படுவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை. எனக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை என்று கூறினார்.
சஞ்சய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.
- இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
- தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டது. தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
- விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட்டு வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
- சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. நேற்று விசாரணை முடிவடைந்தது. அதையடுத்து, 18-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தனி நீதிபதி கூறினார்.
- மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கொல்கத்தா:
தமிழ்நாட்டில் டிஜிட்டல் கைது உள்பட சைபர் கிரைம் குற்றங்கள் கடந்த ஆண்டு அதிகளவில் நடந்துள்ளன. இந்த மோசடிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ரூ.1000 கோடி வரை இழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏராளமானவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நடந்த விசாரணயில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். கொல்கத்தாவில் 5 இடங்களிலும், மாநிலத்தின் மற்ற 3 பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது.
வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கிடைக்கும் ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் யார் யாரிடம் எத்தனை லட்சம் ஏமாற்றி மோசடி செய்தனர்? என்பது தெரிய வரும்.
- மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வங்கதேச இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ்-இன் வழக்கறிஞர் ரபிந்திரா கோஷ்-ஐ திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷ் நேரில் சந்தித்தார். மேற்கு வங்க மாநிலத்தின் பரக்னாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் ரபிந்திர கோஷ் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியா வந்தார்.
தற்போது இவர் பராக்பூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்தியா வந்துள்ள ரிந்திர கோஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் பராக்பூரில் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர் ரபிந்திர கோஷ் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரபிந்திர கோஷ்-இன் விருப்பம் பற்றி முதல்வர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பதாக குனால் கோஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர மத்தியில் உள்ள அரசு அதன் அலுவலகங்களை பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
- இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்
கணவனின் வீட்டில் அவரது விருப்பத்திற்கு மாறாக மனைவி தனது தோழி மற்றும் குடும்பத்தினரை தங்க வைப்பது மன ரீதியான கொடுமை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தீரஜ் குயின்ம் தனுஸ்ரீ மஜூம்தார் ஆகிய இருவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது.
தீரஜ் குயின் வேலை செய்து வந்த பணியிடத்தில் அவருக்கு கோலாகாட் பகுதியில் கோட்டரஸ் வீடு வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் மனைவி தனது தோழி மௌசுமி பால் என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் வீட்டிலேயே வீட்டில் தங்க வைத்துள்ளார். கணவனுக்கு இது பிடிக்காத போதிலும் மனைவிக்காக சகித்துக்கொண்டு அவர்களுடன் தனது வீட்டில் வாழ்ந்துள்ளார். இது இப்படியிருக்க தாம்பத்தியத்திற்கோ, கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவி விரும்பவில்லை. பல நாள் தொடர்ச்சியாக அவர் வீடு தங்குவதில்லை.
அந்த சமயங்களிலும் மனைவியின் தோழி மற்றும் அவரது குடும்பத்துடன் சகித்துக்கொண்டே கணவர் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த அவர் கடைசியாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதை எதிர்பாராத மனைவி, கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
எனவே கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வரதட்சணை கொடுமை வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு இன்று நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தனது மனைவி, அவரது தோழி, அவரது குடும்பத்தினர் என தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுக்கியுள்ளார்.
கணவரின் சம்மதம் இல்லாமல் அவரது வீட்டில் மூன்றாவது நபரை மனைவி தங்க வைத்தது மன ரீதியான கொடுமை. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலோ தாம்பத்தியத்திலோ குறைந்தது கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவிக்கு ஈடுபாடு இல்லை என தெரிகிறது.
இதுவும் கொடுமையாகவே பாவிக்கட்டும் என கூறி கணவனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டனர். மேலும் கணவன் விவாகரத்து கோரிய பிறகே மனைவி வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளதால் அது போலியானது என யூகிக்க முடிவதாக கூறி விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தனர்.
- நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- சாதி வெறியான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நம்முடைய ஜனநாயத்தை தாக்கி வருகிறது.
பா.ஜ.க. அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் 23-ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிராக மம்தா பானர்ஜி பா.ஜ.க.-வுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சாதி வெறியான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நம்முடைய ஜனநாயத்தை தாக்கி வருகிறது. அரசியலமைப்பின் முதுகெலும்பு மீது தாக்கதல் நடத்தியுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக சதி செய்கிறது.
அம்பேத்கருக்கு எதிராக அவமதிப்பு கருத்து கூறியதற்கு எதிராகவும், நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுப்படுத்தியதற்கு எதிராகவும் டிசம்பர் 23-ந்தேதி மதியம் 2 மணி முதல் 3 மணி நாடு முழுவதும் போராட்ட பேரணி நடைபெறும். மாநிலத்தின் ஒவ்வொரு நகராட்சி, பிளாக் மற்றும் கொல்கத்தாவின் ஒவ்வொரு வார்டு என அனைத்து பகுதியிலும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற அவர்களின் கனவு நனவாகியிருந்தால் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சேதத்தை கற்பனை செய்து பாருங்கள்.
- வெறுப்பையும் மதவெறியையும் கொண்ட ஒரு கட்சியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று நாள் முழுவதும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இந்நிலையில் அமித் ஷா பேச்சுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, முகமூடி கழன்று விழுந்தது!
அரசியலமைப்பின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளை நாடாளுமன்றம் பிரதிபலிக்கும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு எதிராக அவமதிப்பு கருத்துக்களைக் கூறி களங்கப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதுவும் ஜனநாயகத்தின் கோவிலில்[பாராளுமன்றத்தில்]
இது பாஜகவின் சாதிய மற்றும் தலித் எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடாகும். [பாஜகவின் பலம்] 240 இடங்களாகக் குறைக்கப்பட்ட பிறகும் அவர்கள் இப்படி நடந்து கொண்டால், 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற அவர்களின் கனவு நனவாகியிருந்தால் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சேதத்தை கற்பனை செய்து பாருங்கள். டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகளை முற்றிலுமாக அழிக்க அவர்கள் வரலாற்றை மாற்றி எழுதியிருப்பார்கள்.
அமித் ஷாவின் கருத்துக்கள் பாபாசாகேப்பை ஆதர்சமாகக் கருதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். ஆனால் வெறுப்பை கொண்ட மதவெறி பிடித்த ஒரு கட்சியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்பின் தந்தை, அமித்ஷாவின் கருத்து அவர் மீது மட்டுமல்ல, அனைத்து சாதிகள், இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளாக இருந்து இந்தியாவின் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமையைக் குறிக்கும் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும் என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
- இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள்
ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.

நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க நாராயண மூர்த்தி வழி சொல்கிறார் என்று இணையவாசிகளும் ஐடி ஊழியர்களும் புலம்பித் தள்ளினர்.
இந்நிலையில் தனது 70 மணி நேர ஐடியாவுக்கு நாராயண மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை முதல் இடத்திற்கு உயர்ந்த நமது இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
- திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
ஆர்.ஜி.கர் பயங்கரம்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.
ஜாமீன்
இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

மீண்டும் போராட்டம்
இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் இன்று [சனிக்கிழமை] ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள நிஜாம் அரண்மனையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு ரவீந்திர சதன் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத சிபிஐ -யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிஜாம் அரண்மனைக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் மேற்கு வங்க ஜுனியர் டாக்டர்கள் முன்னணி (WBJDF) இன்று மதியம் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகம் முதல் சிபிஐ அலுவலகம் வரை கண்டனப் பேரணியை நடத்தியது. மேலும் சிபிஐ அலுவலகத்தின் முன் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
'சிபிஐ என்ன திட்டமிடுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நீதி கிடைக்க இறுதிவரை போராடுவோம்.
சட்டப் போராட்டமும், தெருக்களில் நடக்கும் போராட்டமும் தொடரும்' என்று சால்ட் லேக்கில் நடந்த பேரணியில் கலந்துகொண்டபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
- ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் உள்பட 2 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.
நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திகையை தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.






