என் மலர்
நீங்கள் தேடியது "female doctor murder"
- சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
- ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சந்தீப் கோஷ் பிப்ரவரி 2021 முதல் செப்டம்பர் 2023 வரை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றினார். பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நாள் வரை அவர் பதவியில் தொடர்ந்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக சந்தீப் கோஷுக்கு கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
- சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
- ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சந்தீப் கோஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிய நிலையில் அவருக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
- திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
ஆர்.ஜி.கர் பயங்கரம்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.
ஜாமீன்
இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

மீண்டும் போராட்டம்
இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் இன்று [சனிக்கிழமை] ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ரகசிய புரிதல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள நிஜாம் அரண்மனையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு ரவீந்திர சதன் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத சிபிஐ -யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிஜாம் அரண்மனைக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் மேற்கு வங்க ஜுனியர் டாக்டர்கள் முன்னணி (WBJDF) இன்று மதியம் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகம் முதல் சிபிஐ அலுவலகம் வரை கண்டனப் பேரணியை நடத்தியது. மேலும் சிபிஐ அலுவலகத்தின் முன் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
'சிபிஐ என்ன திட்டமிடுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நீதி கிடைக்க இறுதிவரை போராடுவோம்.
சட்டப் போராட்டமும், தெருக்களில் நடக்கும் போராட்டமும் தொடரும்' என்று சால்ட் லேக்கில் நடந்த பேரணியில் கலந்துகொண்டபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
- மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்ததால் 29 நோயாளிகள் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த சமயத்தில் பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது.
இதனையடுத்து உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் தீவிரமாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதனிடையே ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைப்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.

இதனையடுத்து சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் இந்த மாதம் மீண்டும் போராட்டங்கள் வெடித்தது.
பல மாதங்கள் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியும் இந்த பாலியல் வழக்கில் தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
- அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வழக்கில் தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்டிருப்போம்
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என ஜுனியர் டாக்டர்கள் போராடினர்.

இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சியல்டா மாவட்ட நீதிமன்றம் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
தொடர்ந்து இன்று சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை உத்தரவு ஜுனியர் மருத்துவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் நீதியை கேலி செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர்கள் சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே இந்த தீர்ப்பு குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, "குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முதல் நாளிலிருந்து கோரி வருகிறோம். இப்போதும் அதையே கோருகிறோம்...
வழக்கு எங்கள் கையில் இருந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வழக்கில் தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்டிருப்போம். ஆனால் அந்த வழக்கு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தீர்ப்பு குற்றவாளிக்கு பொருத்தமானது என ஆயுள் தண்டனையை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
- குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
- மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
கொல்கத்தா:
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக போலீசுக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சியால்டா கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி அனிா்பன் தாஸ் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு கொல்கத்தா ஐகோர்ட்டை நாடும். இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன் என்றார்.
இந்த நிலையில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு கொல்கத்தா ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.
- அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். 6 மாத விசாரணைக்கு பிறகு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 20 வயதான 2 ஆம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர். தாயுடன் இஎஸ்ஐ குடியிருப்பில் அப்பெண் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலமுறை போன் செய்தும் மகள் பதிலளிக்கவில்லை. எனவே குடியிருப்பு வீட்டின் பூட்டிய அறைக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிய நிலயில் இருந்ததை தாய் பார்த்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதோலும் மாணவி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மாணவி ஏற்கனேவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறையில் தற்கொலை குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






