என் மலர்
மேற்கு வங்காளம்
- 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார ஆகியவற்றை கூறி சம்மதிக்க வைத்தார்.
- பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து கணவன் அங்கு சென்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் கணவன் சிறுநீரகத்தை விற்று பணத்துடன் காதலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் பகுதியில் வசித்துவரும் பெண், வீட்டின் நிதிசூழலை காரணம் காட்டி தந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
மகளுக்கு 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு விஷயங்களை கூறி கணவனுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
சுமார் ஒரு வருடமாக சிறுநீரகத்தை வாங்குபவரை தேடிய கணவன், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றார். அதன்பின் அந்த பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து கணவன்பராக்பூரில் தனது மனைவி காதலுடன் வசித்துவருவதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.
பலமுறை முயற்சித்தபின் கடைசியாக மனைவி கதவை திறந்து அங்கிருந்து போகுமாறும் விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன் எனவும் கூறி கணவனை துரத்தியுள்ளார். மனமுடைந்த கணவன் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
- கொல்கத்தாவில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுகிறது.
- குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன.
கொல்கத்தா:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுகிறது.
கொல்கத்தாவில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு அடைந்தது. குறிப்பிட்ட நேரங்களில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மோசமான வானிலை நிலவுவதால் பயணிகள் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விமான புறப்பாடு தாமதம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏற்கனவே, ஜனவரி 23-ம் தேதி 72 விமானங்கள், 24-ம் தேதி 34 விமானங்கள், 25-ம் தேதி 53 விமானங்களின் சேவைகள் பாதிப்பு அடைந்தன.
- சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வவருகிறது.
- பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர் முதலாம் ஆண்டு மாணவனை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பேசு பொருளாகியுள்ளது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோவில் வகுப்பறைக்குள் பேசாரியை மற்றும் மாணவன் என இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிந்தூர் பூசிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வவருகிறது.
இந்த சம்பவம் ஒரு திட்டத்தின் பகுதி என்று பேராசிரியை கூறினார். வீடியோ பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
"இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது. எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது. என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்," என்று பேராசிரியை கூறியுள்ளார்.
துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருவதாகவும், அதை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தனது பாடத்தில் நடந்த திட்டத்தின் ஒரு பகுதி என்று பேராசிரியை விளக்கியதாக அவர் கூறினார்.
- நேதாஜியின் இறந்த தேதி குறித்த குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது.
- பா.ஜ.க. விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
கொல்கத்தா:
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மகத்தான புரட்சியாளரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. நேதாஜியின் தலைமை, தைரியம், சமூக நீதிக்கான அவரது போராட்டம் மற்றும் அவரது பங்களிப்பு சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கம் இன்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கிறது என பதிவிட்டார்.
மேலும், நேதாஜியின் படத்துடன் அவரது வாழ்நாள் ஜனவரி 23, 1897-ஆகஸ்ட் 18, 1945 என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேதாஜியின் இறந்த தேதி குறித்த இந்தக் குறிப்புக்கு பா.ஜ.க. கடும் கண்டனத்தை தெரிவித்தது. பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், நேதாஜியின் இறந்த தேதி குறித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அகில பாரதியஇந்து மகாசபை சார்பில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, இந்து மகாசபை மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், ராகுல் காந்தியும் அவரது முன்னோர்களும் எப்போதும் நேதாஜியின் நினைவுகளை இந்திய மக்களின் நினைவிலிருந்து அழிக்க முயற்சி செய்கிறார்கள். அவரை இந்திய மக்கள் தண்டிப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை நேதாஜி பற்றிய தகவல்களை யாராவது திரிபுபடுத்த முயன்றால் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறினார்.
+2
- 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது
- சஷாஸ்திர சீமா பால் (SSB) வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்.
அதன்பின் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-வங்கதேச எல்லையில் இருநாட்டு ராணுவங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் உள்ள ஃபுல்பாரி இந்தோ-வங்கதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்), வங்கதேச எல்லைக் காவலர்களுக்கு (பிஜிபி) இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல, இந்திய-நேபாள எல்லை, டார்ஜிலிங்கில் உள்ள பானிடாங்கி பகுதியில், சாஷாஸ்திர சீமா பால் (SSB) மத்திய காவல்படை வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
- டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை டெலிவரி செய்யாமல் ஸ்விக்கி ஊழியர் தப்பி ஓடிவிட்டார்.
- இது தொடர்பாக ஸ்விக்கியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியை காண தனது மேனேஜர் வாங்கிய 2 டிக்கெட்டுகளை ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியர் திருடியதாக நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது மேனேஜர் பதிவிட்ட பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வஸ்திகா முகர்ஜி பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இன்று எங்களுக்கு இது நடந்தது, நாளை உங்களுக்கும் நடக்கலாம். ஈடன் கார்டனில் நடந்த இந்தியா-இங்கிலாந்து போட்டிக்கான 2 டிக்கெட்டுகளை நேற்று ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியர் திருடி சென்று விட்டார்.
கான்பூரில் இருந்து இந்த டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வந்த எனது நண்பரின் தந்தைக்கு இந்த 2 டிக்கெட்டுகளை ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியரிடம் கொடுத்து அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் டிக்கெட்டுகளை டெலிவரி செய்யாமல் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக ஸ்விக்கியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் காவல்துறையினரால் கூட உதவ முடியாததால், டிக்கெட்டுகளை மீட்பதற்கான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். அந்த திருடனைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஸ்விக்கியில் இருந்தும் அவர்கள் மௌனம் காப்பது என்னை மிகவும் விரக்தியடையச் செய்தது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் யார் தான் ஸ்விக்கியை நம்புவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி பொருட்களை டெலிவரி செய்யும் விதமாக ஸ்விக்கி ஜெனி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து வென்றது.
கொல்கத்தா:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் சிறப்பாக ஆடி 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து இறங்கிய திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றது.
3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 79 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு.
- நாங்கள் வழக்கை நடத்தியிருந்தால் மரண தண்டனை வாங்கி கொடுத்திருப்போம் என்றார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.
மறுபுறம் பஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்பவர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந்தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன் குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் வழக்கை கையாண்டிருந்தால் மரண தண்டனை வாங்கி கொடுத்திருப்போம் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
- குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
- மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
கொல்கத்தா:
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக போலீசுக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சியால்டா கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி அனிா்பன் தாஸ் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு கொல்கத்தா ஐகோர்ட்டை நாடும். இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன் என்றார்.
இந்த நிலையில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு கொல்கத்தா ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.
- அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வழக்கில் தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்டிருப்போம்
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என ஜுனியர் டாக்டர்கள் போராடினர்.

இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சியல்டா மாவட்ட நீதிமன்றம் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
தொடர்ந்து இன்று சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை உத்தரவு ஜுனியர் மருத்துவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் நீதியை கேலி செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர்கள் சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே இந்த தீர்ப்பு குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, "குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முதல் நாளிலிருந்து கோரி வருகிறோம். இப்போதும் அதையே கோருகிறோம்...
வழக்கு எங்கள் கையில் இருந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வழக்கில் தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்டிருப்போம். ஆனால் அந்த வழக்கு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தீர்ப்பு குற்றவாளிக்கு பொருத்தமானது என ஆயுள் தண்டனையை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
- பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.
- குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.
மறுபுறம் பஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
- எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயிற்சி மருத்துவர், 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இரவு பணியின் போது மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்குள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குற்றவாளியான சஞ்சய் ராயின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர், அவர்களின் (பாதிக்கப்பட்ட பெண்ணுடைய பெற்றோரின்) வலியை நான் புரிந்துகொள்கிறேன். அவனுக்கு தகுதியான தண்டனை கிடைக்கட்டும். அவனை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும், அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராயின் மூத்த சகோதரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி அவர் தண்டிக்கப்படுவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார்.
சஞ்சய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தான் இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் ராய் கூறியது குறிப்பிடத்தக்கது.






