என் மலர்
உத்தரப் பிரதேசம்
- முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமும், கே எல் ராகுல், ஸ்மரன் ரவிசந்திரன் சதமடித்தனர்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். கே.எல்.ராகுல் 141 ரன்னும், தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மரன் ரவிசந்திரனும் சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர், கிருதிக் கிருஷ்ணா தலா 60 ரன்னும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லக்ஷய் ராஜேஷ் 58 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்களும் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஆதித்யா ராவத் அதிரடியாக ஆடி 38 பந்தில் 45 ரன் எடுத்தார்.
இறுதியில், உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கர்நாடக அணி சார்பில் வித்யாதர் பாட்டீல், விஜயகுமார் வைஷாக் தலா 3 விக்கெட்டும், ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 503 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஸ்மரன் ரவிசந்திரன் இந்த இன்னிங்சிலும் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். கிருதிக் கிருஷ்ணா 52 ரன்னில் வெளியேறினார்.
நான்காம் நாள் முடிவில் கர்நாடக அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கர்நாடக அணி இதுவரை 802 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
- கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.5 நாட்கள் நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி நீட்டிக்கப்பட்டு தற்போது இந்த மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டுடன், 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது. இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கண்காட்சியில் சீன ரோபோ காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பெவிலியனை நிர்வகித்த எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது. தயாரிப்பின் தொழில்நுட்ப தோற்றம் குறித்து அவருக்குத் தெரியாது, மேலும் கேமராவில் இருக்கும் ஆர்வத்தில், பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உண்மையில் தவறான தகவல்களைக் கொடுத்தார். ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துவிட்டோம்," என்று தெரிவித்தது.
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன
- முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்தார்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தியது. 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார். சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஸ்மாரன் ரவிசந்திரன் நிதானமாக ஆடி சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர் 60 ரன்னிலும், கிருதிக் கிருஷ்ணா 60 ரன்னிலும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இன்னும் 587 ரன்கள் பின்தங்கியுள்ளது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் கர்நாடக 355 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து கே எல் ராகுலுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 148 ரன்னுடனும், கருண் நாயர் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது.
- யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12-ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக உரிய அனுமதி அல்லது பதிவு இன்றி இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. தற்போது அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு யோகேஷ் இது போன்ற சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.
மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
- அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.
- மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். காவலாளியான இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் சவுகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சந்தியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். முசாபர் நகரை சேர்ந்த போலீஸ்காரரான அதுல் சர்மா என்பவருக்கும், சந்தியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இரு வீட்டாரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து முடித்தனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. இதற்கிடையே மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனையறிந்த சந்தியா காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை சந்தியாவும், அங்கித் சவுகானும் வீட்டை விட்டு வெளியேறினர். மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர்களால் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தியா தனது காதலனுடன் பக்சர் நகரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்தியா தன்னை யாரும் கடத்தவில்லை. அங்கித் கவுகானுக்காக தானே வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தார்.
போலீசார் அங்கித் சவுகான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதனால் அவரை பிரிந்து வர வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் சந்தியா அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரைத்தான் நான் காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என்னால் அங்கித் சவுகானை விட்டு பிரிந்து வர முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார். இதனால் சந்தியாவின் திருமணம் நிறுத்தப்பட்டது.
- உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
- மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட ஆர்வம் கொண்டவர்கள் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் விபரீதத்தில் முடிகிறது.
லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் வீடியோவை எடுக்க முயன்று உயிரிழக்கும் சம்பவங்களும் தினசரி நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானாலும் விழிப்புணர்வு என்பது இல்லாததே வேதனையாக உள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு 27 வயதான பெண் செய்த செயலால் இன்றைக்கு அப்பெண்ணின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த மோகினி என்பவர் இணையதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று வித்தியாசமான ரீல்ஸை எடுக்க முடிவு செய்த அவர், அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார். அப்போது கால் தடுமாறி கழுத்தில் கட்டிக்கொண்ட கயிறு இறுக்கியதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.
சில மணிநேரம் கழித்து மோகினியின் 4 வயதான மகள் அறைக்குள் நுழைந்த போது தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போடவே இச்சம்பவம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரீல்ஸ் எடுக்க ஆசைக்கப்பட்ட மோகினி செய்த செயலால் இன்று அவரின் 4 வயது மகள் தாயை இழந்து தவிக்கிறாள்.
- இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது
- இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதன்படி மார்.6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 6 வரை வழங்கப்பட்டது.
இதுவரை பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-இன் மூலம் 82,684 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், பெயர்களைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்தி சுமார் 37.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 6A-இன் மூலம் விண்ணப்பிக்கலாம்; இதுவரை 1,076 புலம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.
"சுமார் 1.40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்தபோதிலும், அவை வரைபடமாக்கப்படவில்லை (not mapped). அதேசமயம், 2.22 கோடி வாக்காளர்கள் வரைபடமாக்கல் பணியை முடித்திருந்தாலும், அவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற அனைத்து வழக்குகளிலும் தற்போது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக, 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை 2.37 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 86.27 லட்சம் நோட்டீஸ்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 லட்சம் வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-லிருந்து மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் சிறப்பு திருத்தப் பணியின் கீழான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்." என தெரிவித்தார்.
மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கு முன்னரும் அனைத்து ஆட்சேபனைகளும் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் எழுத்துக்கள் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.
- 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
- மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து குதித்து செய்துகொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.
இவர்கள் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
இவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களை புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
டைரியில் கண்டெடுக்கப்பட்ட அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.
நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.
எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.
நிஜ வாழ்க்கையின் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் இந்த போக்கு ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
- ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நிரபராதி என நீதிமன்றம் தற்போது விடுத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட தானி ராம்-க்கு தற்போது வயது 100. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தானி ராம். 1982-ஆம் ஆண்டு ஒரு நிலத் தகராறில் நடந்த கொலை தொடர்பாக தானி ராம் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1984-ஆம் ஆண்டு ஹமிர்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து 1984-லேயே தானி ராம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திர தாரி சிங் மற்றும் சஞ்சீவ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தானி ராமை விடுவித்து நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.
ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
- லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- கடந்த 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்கின்றன.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.






