என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே...
    • பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.

    பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கல்வி கண் திறந்து

    ஆலைகள் பல தந்து

    அணைகள் பல உயர்த்தி

    தமிழகத்தை வளர்த்தி

    தலைவர்களில் தலைவனாய்

    பார் போற்றும் முதல்வனாய்

    அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே..

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அவதமணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மலர் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பரிசுகள் வழங்கினார்.

    • 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

    அரியலூர்:

    அரியலூரில் விவசாயிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். இதன் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன்களை தள்ளுபடி செய்தோம்.

    * 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் உழவன் செயலியை அறிமுகம் செய்து, பருத்தி நோய் தாக்குதலின் போது மருந்து அடிக்க பரிந்துரைத்தோம்.

    * மரவள்ளி கிழங்கு நோய் தாக்குதலுக்கு, மாவு பூச்சி பயிர்களுக்கு தேவையான மருந்து அடித்து பாதுகாத்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏரிகளை தூர்வாரிய போது வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்பெற்றாக கூறினார்.

    • நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
    • மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும்.

    திண்டிவனம்:

    சென்னையில் ஏ.கே.மூர்த்தி குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு விழுப்புரம் மாவட்டம் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பினார். அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு அது குறித்து நாளை சொல்கிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    அன்புமணி மற்றும் அவரது தாயார் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பிள்ளையை பார்ப்பது ஒன்றுமில்லை என பதிலளித்தார்.

    மோதல் போக்கு சரியாகிவிட்டதா என கேட்ட கேள்விக்கு மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும். விரைவில் நாங்கள் இருவரும் சந்திப்போம் என டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார்.

    • தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபாலசுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம்.

    தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர் விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    2018 முதல் 2025 வரை உள்ள 8 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை, நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயத்திற்கென பெயரளவில் தனி நிதிநிலை தாக்கல் செய்தால் மட்டும் போதாது.
    • வேளாண் வளர்ச்சிக்கும், உழவர்களின் முன்னேற்றத்திற்குமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 4 லட்சத்திற்கும் கூடுதலான விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்தனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த தி.மு.க. அரசு அதை முறையாக செய்யவில்லை.

    விவசாயத்திற்கென பெயரளவில் தனி நிதிநிலை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. வேளாண் வளர்ச்சிக்கும், உழவர்களின் முன்னேற்றத்திற்குமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், உழவர்களின் நலன்கள் தொடர்பாக தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது தி.மு.க. அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான். கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்களுக்கு துரோகம் செய்து வரும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது.
    • குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்ற புத்தக திருவிழா தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு பொன் பொருளை கொடுப்பதை விட புத்தகங்களை பரிசாக கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெளிவு கிடைக்கும். பள்ளி குழந்தைகள் பாட புத்தகங்களை திரும்பத்திரும்ப படிக்கின்றனர். நான் இப்பகுதியில் 2 ஆண்டுகள் ஆரம்ப கல்வி படித்துள்ளேன்.

    நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நாம் எடுத்துக்கூற வேண்டும்.

    கிராம பகுதியில் உள்ள குழந்தைகள் சூழ்நிலை காரணமாக அச்சத்தை எதிர்கொள்கின்றனர். நகர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் அனைத்து வசதிகளும் கிடைப்பதால் அவர்களுக்கு அச்சத்தை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    தற்போது உழைக்கும் இளம் வயதினர் அதிகமாக உள்ளனர். இன்னும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நாடு வளர்ச்சி இருக்காது. ஏனென்றால் உழைக்கும் வயது குறைந்து முதியவர்கள் தான் இருப்பார்கள். ஆகையால் தற்போது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல உழைக்கும் இளைஞர்கள், நல்ல அதிகாரிகள் தேவை.

    குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் பேச முடியும். மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும். ஆனால் சிறந்த மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறப்போவதில்லை. நாம் புத்தகங்களை படித்த பிறகு மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சிதம்பரம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை-எளிய மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தொகுதி வாரியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்றார். அந்த வகையில் அவரிடம் சுமார் 1 கோடி 5 ஆயிரம் பேர் மனுக்களை அளித்தனர்.

    இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளுக்கு தீர்வு காண "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் கடந்த மாதம் வரை 1 கோடியே ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

    இதையடுத்து தமிழக மக்கள் அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் அதன் பலன்களை உடனடியாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.

    2-வது கட்டமாக கிராமப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 2,344 முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 95 சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

    3-வது கட்டமாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 47 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிலையில் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த திட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் சிதம்பரம் கீழவீதியில் உள்ள ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு அவர் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டம் முதல்வரின் முகவரி துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



    இந்த சேவைகளை பெற முதல் கட்டமாக இன்று முதல் நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் 3,738 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படும்.

    இது மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், கணினி இயக்குநர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல் கட்டமாக இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நகரப் பகுதிகளில் 1,428 இடங்களிலும், கிராமப் பகுதிகளில் 2,135 இடங்களிலும் மனுக்களை பெறுவார்கள்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் வெவ்வேறு இடங்களில் 6 முகாம்கள் நடத்தப்படும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. முகாம்கள் நடக்கும் தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் மகளிர் உரிமைத் தொகைக்காக 4 கவுண்டர்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். மற்ற சேவைகளை பெற தலா 2 கவுண்டர்கள் இருக்கும்.

    இந்த முகாம்களில் இ-சேவை, ஆதார் அட்டையில் மாற்றங்கள் போன்றவற்றையும் முகாம்களில் செய்யலாம். இந்த சேவைக்கு மட்டும் பாதி கட்டணமாக அதாவது ரூ.30 வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதில்கள் திருப்தியாக இல்லாவிட்டால் மனு தாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மனுக்கள் கொடுத்த பிறகு அது எந்த நிலையில் உள்ளது என்பதை இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரெயில் மூலம் சிதம்பரம் வந்தார்.
    • இன்று காலை முதலமைச்சர் காரில் புறப்பட்டு ரெயிலடி திடலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

    சிதம்பரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரெயில் மூலம் சிதம்பரம் வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் . இதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்து கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதி வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கீழரதவீதியில் உள்ள தனியார் வீடுதியில் தங்கினார்.

    இன்று காலை அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ரெயிலடி திடலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

    12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

    11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-07-2025- ஒரு கிராம் ரூ.127

    13-07-2025- ஒரு கிராம் ரூ.125

    12-07-2025- ஒரு கிராம் ரூ.125

    11-07-2025- ஒரு கிராம் ரூ.121

    10-07-2025- ஒரு கிராம் ரூ.120

    • 21-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தருமபுரி:

    கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.

    இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    21-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    • தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
    • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணை வரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி 44-வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த 5-ந் தேதி நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 19,760 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,485 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 119.66 அடியாகவும், நீர் இருப்பு 92.93 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    • தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?

    சென்னையில் நேற்று இரவு பா.ம.க. வடக்கு மண்டல இணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு வந்த பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

    இந்நிலையில் விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    கேள்வி: அன்புமணி அவர்கள் நீங்கள் வரும் வரை காத்திருத்துவிட்டு கிளம்பி இருக்கிறார். இதற்கெல்லாம் எப்போது முடிவு வரும்?

    பதில்: போகப் போகத் தெரியும் என்று பாடலாக பாடினார்.

    கேள்வி: ஒட்டு கேட்கும் கருவியை யார் வைத்தது என்று கண்டுபிடித்து விட்டீர்களா?

    பதில்: அது பிராசசில் உள்ளது.

    கேள்வி: தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?

    பதில்: விரைவில்... விரைவில்...

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×