என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போகப் போகத் தெரியும்... அன்புமணி உடனான பிரச்சனைக்கு எப்போது முடிவு வரும்?- ராமதாஸ் பதில்
- விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
- தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?
சென்னையில் நேற்று இரவு பா.ம.க. வடக்கு மண்டல இணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வந்த பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
இந்நிலையில் விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: அன்புமணி அவர்கள் நீங்கள் வரும் வரை காத்திருத்துவிட்டு கிளம்பி இருக்கிறார். இதற்கெல்லாம் எப்போது முடிவு வரும்?
பதில்: போகப் போகத் தெரியும் என்று பாடலாக பாடினார்.
கேள்வி: ஒட்டு கேட்கும் கருவியை யார் வைத்தது என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
பதில்: அது பிராசசில் உள்ளது.
கேள்வி: தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?
பதில்: விரைவில்... விரைவில்...
இவ்வாறு அவர் கூறினார்.






