என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியுடன் விரைவில் சந்திப்பு - ராமதாஸ்
- நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
- மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும்.
திண்டிவனம்:
சென்னையில் ஏ.கே.மூர்த்தி குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு விழுப்புரம் மாவட்டம் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பினார். அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு அது குறித்து நாளை சொல்கிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி மற்றும் அவரது தாயார் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பிள்ளையை பார்ப்பது ஒன்றுமில்லை என பதிலளித்தார்.
மோதல் போக்கு சரியாகிவிட்டதா என கேட்ட கேள்விக்கு மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும். விரைவில் நாங்கள் இருவரும் சந்திப்போம் என டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார்.
Next Story






