என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி தங்க ஹம்ச வாகனம், 20-ந் தேதி தங்க கிளி வாகனம், 21-ந்தேதி ரதம் உற்சவம், 23-ந்தேதி வெள்ளி ரத உற்சவம், 26-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது. அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருத்தணி

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் கேடய உலா உற்சவத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி-தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணம், 23-ந் தேதி கதம்ப பொடி விழா 24-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன். மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன் சுரேஷ் பாபு, நாகன் செய்து வருகிறார்கள்.

    திருப்போரூர்

    திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் செய்துள்ளனர்.

    • தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
    • மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கூட்டணி கட்சிகள் கொடுத்துள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.

    வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்னும் 2 நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அடுத்த வாரத்தில் கமல்ஹாசனுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என் பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தி.மு.க. தரப்பில் கேட்டபோது, "கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரசுக்கே இந்த முறை 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி ஒரு சீட் மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் கமல்ஹாசனே களம் இறங்க முடிவு செய்துள்ளார்.

    தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விரும்புகிறார்கள். இதில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது.

    தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தற்போது தி.மு.க. வசம் உள்ளது. கோவை, மதுரை தொகுதி கள் கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இப்படி மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன. தென்சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க தி.மு.க.வுக்கு மனமில்லை. கோவை, மதுரை தொகுதிகள் நாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளாகும். அதனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? என்று கம்யூனிஸ்டு கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

    ராமநாதபுரம் தொகுதியை எந்த சூழலிலும் நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதனாலேயே சிக்கல் நிலவி வருகிறது.

    இதுபோன்ற குழப்பங்களால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதன் மூலம் அடுத்த வாரம் கமல்ஹாசனுடன் நடத்தப்படும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதி இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
    • பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

    பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆவடியுடன் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி சேரும் கட்சிகள் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக தெரியவில்லை.

    ஆனால் பா.ஜனதா தரப்பில் வெற்றி இலக்கை எட்ட புது புது வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

    எனவே நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    மற்றொரு புறத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று கட்சிகளில் இருந்தாலும் பிரதமர் மோடி என்ற வலிமையான தலைமை நாட்டுக்கு தேவை என்ற உணர்வுடன் இருப்பவர்கள், ஆகியோரை கண்காணித்து அவர்களில் பா.ஜனதாவுக்கு வர ஒத்துக் கொள்பவர்களை இணைப்பது இல்லாவிட்டால் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறுவது என்ற அடிப்படையில் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

    ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் 15 பேர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

    காங்கிரஸ் கட்சியிலும் உழைப்பவர்களுக்கு பதவிகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் கட்சியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா வலிமையோடு இருப்பது போல் அ.தி.மு.க. வும் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலிமையான தலைவர்களாக இருப்பது எஸ்.பி.வேலுமணியும், கே.டி.தங்கமணியும் தான்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர்கள் இருவரையும் பா.ஜனதா வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். வருகிற 27-ந் தேதி பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு தேவையான உதவிகளையும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணையின் போது அவர் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    இதற்காக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார், கொள்ளை சம்பவத்தின் போது அங்கு நடந்தது என்ன? யார் உங்களை அங்கு அழைத்து சென்றது? யாருக்காக கொள்ளையடிக்க சென்றீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவர்னர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.
    • போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால், கவர்னர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.

    இது, எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?

    எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். "தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு" என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்..." நான் ஸ்டாலின்! அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! பாசிசத்தை-எதேச்சாதிகாரத்தை-இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.
    • திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சென்னை

    சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.

    * சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது.

    * திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? - வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம்.

    * முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை.

    * மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

    * நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

    • தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்களில் முக்கிய போக்குவரத்தாக புறநகர் ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக மின்சார ரெயில்சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

    இதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் வழக்கமாக இயக்கப் பட்ட ரெயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 90 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 83 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ தகவலை ரெயில்வே அறிவிக்க வில்லை. எனினும் குறைந்த அளவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் 45 மின்சார ரெயில் சேவை, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்திற்கு 45 ரெயில் சேவை கள் இயக்கப்பட்டன. பின்னர், பராமரிப்பு பணி கள் காரணமாக ரெயில் சேவைகள் குறைக்கப் பட்ட தாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 42 ெரயில்களும், செங்கல்பட் டில் இருந்து தாம்பரத்திற்கு 41 ரெயில்களும் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படவில்லை. இதனால் மக்கள்அதிகம் பயன்படுத்தும் வழித்தடத்தில் 83 ரெயில் சேவைமட்டுமே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பரித விக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ள தால் அதிகமானோர் மின்சார ரெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணி கள் சென்னை நகர் பகுதியில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் செல்ல கூடுதல் செலவு மற்றும் பயணநேரம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ரெயில் சேவை பயணம் மேலும் உயர்ந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பஸ்பயணிகள் தற்போது வண்டலூர், மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்களில் இறங்கி செல்கிறார்கள். அதிகாலை நேரத்தில் மாநகர பஸ்போக்குவரத்து போதிய அளவில் இல்லாதததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    ஏற்கனவே மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பயணிகள் கூட்டத்தால் ஊரப்பாக்கம், பொத்தேரி ரெயில் நிலையங்களிலேயே ரெயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காலை நேரங்களில் வழக்கமாக சென்னை நகருக்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்லும் பய ணிகள் கடற்கரை மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலில் செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

    அவர்கள் கூட்ட நெரிசலை கண்டு அடுத்த மின்சார ரெயிலில் காத்திருந்து ஏறினாலும் அதே அளவு கூட்டம் வருவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை தயார் நிலையில் இருந்தபோது செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 3-வது ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் ரெயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை மாலை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் இதுபற்றி தெரியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். ரெயில்நிலையங்களில் இது போன்று ரெயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க எந்த அறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க ரெயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பயணிகளை பற்றி ரெயில்வே துறையினர் கவலைப்பாடாமல் அவர்கள் விரும்பியபடி ரெயில் சேவைகளை இயக்குகின்றனர் என்றனர்.

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
    • தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் ஜாமின் வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணையின்போது, தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இது தொடர்பாக காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை பிப்.21-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
    • நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லாருக்கும் எல்லாம் என்னும் விதையை விதைத்தவர் பெரியார். அதனை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி.

    * இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.

    * தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன்.

    * அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் அவரது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக்கொண்டார்.

    * திராவிட மாடல் வழித்தடத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

    * சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்.

    * புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு என் பதில்.

    * கலைஞர் இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்.

    * தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளோம்.

    * ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * இந்திய பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடலின் சாதனை.

    * திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது.

    * நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

    * முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை, முன்னேற்ற மாதங்கள்.

    * ஜி.டி.பி.யில் இந்தியா 2ம் இடம்.

    * மின்னணு உற்பத்தியில் 6-வது இடம்.

    * செஸ் விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

    * காலை உணவு திட்டத்தை தினத்தந்தி நாளிதழ் "அன்று காமராஜர், இன்று ஸ்டாலின்" என பாராட்டியது.

    * ஜி.எஸ்.டி. வரி முறையால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

    * மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.

    * எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில் திட்டங்களை தருவதில்லை.

    * மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    * பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சி தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.

    ×