என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர்:

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஷ்வரன்மலை கோவிலுக்கும் மற்றும் மேட்டூர் கொளத்தூர் ஆகிய பகுதிக்கும் சென்று வர காவிரி ஆற்றை கடந்து மேட்டூர் அடுத்த கொளத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொளத்தூரில் இருந்து அரசு பஸ் மூலம் சென்று காவிரி ஆற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
    • ராணுவத்தின் கடுமையான பதிலடியால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர்.

    ரஜோரி:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது.

    குறிப்பாக தோடோ மாவட்டத்தில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு, கதுவா பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் பலி என அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, அங்கு பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பிடிக்க மாநில போலீசாருடன் ராணுவ படையும் களமிறங்கி உள்ளது. சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 500 பேர் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. உடனே ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    ராணுவத்தின் கடுமையான பதிலடியால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர். இதனால் அங்கு நடைபெற இருந்த பயங்கரதாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது.
    • ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கம்ப ராமாயணத்தை உற்றுநோக்கி உள்நோக்கி சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அங்கே நமக்கு தெரிவது, சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இதுதான் கம்ப ராமாயணம்.

    இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது என்பதால், இதை நான் சொல்கிறேன்.

    மற்றவர்கள் யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ராமன் எந்த குலத்தில் பிறந்தான் என்று பார்ப்பது கிடையாது. ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான் என்றுதான் நாம் பார்க்கிறோம்.

    தசரதனுடைய மகனாகத்தான் விபீஷனனையும், குகனையும், சுக்ரீவனையும், ராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அங்கே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை எதிர்காலத்திலே உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராம காவியம், கம்ப ராமாயணம் என்பதை நாம் இங்கே மனதிலே வைத்துக்கொண்டாக வேண்டும்.

    எனவே, பாதி பேருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். அந்த வித்தியாசமான கண்ணோட்டத்திலே நாங்கள் பார்க்கிறபோது, இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக இருக்கும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.

    தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க.ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.

    இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு, இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலை எங்களுக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார் உடன்பட்டு இருந்தார், சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    சமத்துவம் சமூக நீதி எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷணனோடு சேர்ந்து ஏழ்வரானோம் என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரபான்மையோடு ராமர் நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்வதோடு அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த பக்குவம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்

    அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோவிலுக்கு செல்பவன் தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர் தான்.

    • பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 2 லட்சம் மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.

    பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.

    தமிழகத்தில் தற்போது 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எல்லோருக்கும் இடங்கள் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் கிடைப்பதுதான் கடினம்.

    பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடங்கள் உள்ளன. 3 சுற்றுகளாக ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வு முடிந்த பிறகும் மாணவர்கள் விரும்பினால் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 8 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. புதிதாக 3 கல்லூரிகள் உருவாகி உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    • அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
    • வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.

    அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.

    இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.

    இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.

    தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    • கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • நடப்பாண்டு 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் அனுமதி ரத்து மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியானது.
    • காபி டேபிள் புத்தகத்தை ஏவிஏ குழுமம் வெளியிட்டது.

    நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு பிராண்டான மெடிமிக்ஸ் தனது 55 ஆண்டுகால பயணத்தை சித்தரிக்கும் வகையில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

    சோப்எரா (Soapera) என்ற பெயரில் மெடிமிக்ஸ் குடும்பம் தயாரித்து இருக்கும் பிரத்யேக காபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நேர்த்தியான புத்தகத்தின் முதல் பிரதி, சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியானது.

    நிகழ்ச்சியில் ஏவிஏ சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஏவி. அனூப் மற்றும் சோலையில்–இன் நிர்வாக இயக்குனர் திரு. V.S. பிரதீப் ஆகியோர் இசைஞானி இளையராஜாவிடம் நேரில் வழங்கினர். 

    • கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
    • மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கேந்திர நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    • 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று, திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விஷன்' என்ற ஓ.டி.டி. தளத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., நடிகர் சத்தியராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    அனைவரின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர் பெரியார். பா.ஜனதா எங்களை எதிர்க்க எதிர்க்க தான் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம். ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள். பெரியாரை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போது தான் பெரியார் என்பவர் யார் என்று இந்த தலைமுறை பேச ஆரம்பித்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, நடிகர் சத்யராஜ் பேசுகையில், 'நாங்கள் எப்போதுமே எதிர்ப்பில் தான் வளர்வோம். எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். கருணாநிதியை விட மிகவும் வேகமான ஒருவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பெரியாரை விஞ்ஞானமயப்படுத்துவது மிகவும் அவசியம்' என்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 'தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில் மக்களிடம் பல மூடநம்பிக்கைகள் ஒளிந்து இருக்கிறது.

    எனவே, பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ அதே ஊரில் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார்' என்றார்.

    • நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்

    நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் கொண்டாடினார்.
    • கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட விஜய்வசந்த் அமோக வெற்றி பெற்றார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனவர் விஜய்வசந்த். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விஜய்வசந்த் முகநூல் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இத்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    ×