என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pannavadi"

    • மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர்:

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஷ்வரன்மலை கோவிலுக்கும் மற்றும் மேட்டூர் கொளத்தூர் ஆகிய பகுதிக்கும் சென்று வர காவிரி ஆற்றை கடந்து மேட்டூர் அடுத்த கொளத்தூர் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை ஆகிய பகுதிக்கு செல்ல பொதுமக்கள் செல்ல பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கி உள்ளது.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொளத்தூரில் இருந்து அரசு பஸ் மூலம் சென்று காவிரி ஆற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    ×