என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
    • தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.

    மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.

    * கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

    * தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.

    * 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.

    * தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.

    * அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.

    * எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.

    * எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

    * அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
    • வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத் தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. இதேபோல் வாயு எங்கிருந்து கசிந்து வருகிறது, எந்த வகையானது என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. காலை முதல் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர்.

    அப்போது பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கினர். மேலும் பலருக்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டது. வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அதே பகுதி எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவிகள் நலமாக உள்ளனர்.

    இது பற்றி அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முருகன், போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிஸ், கிருஷ்ணராஜ் திருவொற்றி யூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிக்கட்டா தேஜா, மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பள்ளியை ஆய்வு செய்தனர்.

    மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன் சிலர் டாக்டர் கே. கார்த்திக் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு எந்த வகையானது, எங்கிருந்து கசிகிறது என்பது தெரியாததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது. இதையடுத்து பள்ளிக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ஏற்கனவே பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கினர். ஆனால் இந்த வாயு கசிவு குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. வாயு எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.

    இப்போது மீண்டும் பள்ளியை திறந்த போதும் வாயு கசிவால் மாணவிகள் மயங்கி உள்ளனர். வாயு கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் பள்ளியை திறக்க வேண்டும்.

    இதுபற்றி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    • இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
    • உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.


    அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.

    அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.

    காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.
    • நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

    எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.

    இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

    இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

    இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கட்சியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளை அதிகளவில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை திருமாவளவன் நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு முகநூல் நேரலை வழியாக பேசி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தை அறிவிக்க இருக்கிறோம்.

    தற்போது இயங்கும் 144 மாவட்டச் செயலாளர்கள் அதிக புகார் உள்ளவர்கள், பணி செய்யாமல் செயலற்று இருப்பவர்கள் மற்றும் எல்லை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டி இருக்கும்.

    புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

    பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    புதிதாக விண்ணப்பம் அளிக்க விரும்புபவர்கள் இந்த பரிந்துரை குழுவிடம் நமது தமிழ்மண் சந்தா 2000 ரூபாய் மற்றும் பொறுப்புக்கு 1000 ரூபாய் டி.டி எடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில-மாவட்ட பொறுப்புகளுக்கும் இந்த பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.

    புதிதாக நியமிக்கப் படும் மாவட்ட நிர்வாகம்:

    மாவட்டச் செயலாளர்-1, மாவட்ட பொருளாளர்-1, மாவட்டத் துணைச் செயலாளர்கள்-5, மாவட்ட செய்தி தொடர்பாளர்-1, செயற்குழு உறுப்பினர்-1, மகளிர் அணி செயலாளர்-1, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர்-1, மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள்.

    கட்சியில் பிரிக்கப்பட்ட ஒரு ஒன்றிய நிர்வாகத்திற்கு ஒரு மாவட்டத் துணைச் செயலாளர் என்ற அடிப் படையில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட ஒன்றிய நிர்வாகம் நம் கட்சியில் பிரிக்கப்பட்டால், அந்த பிரிக்கப்பட்ட ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு மாவட்டத் துணைச் செய லாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பொறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய நிர்வாகத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற 15-ந் தேதிக்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப் பப்படையில் நியமிக்கப்படும் பரிந்துரை குழுக்கள் இன்றி, மேலும் ஐந்து மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது.

    வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது.

    தற்போது உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறார்கள். இவற்றைக் குறித்து அந்த பகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுவுடன் பேசி ஒரு முடிவு எடுத்து அவை சரி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    எந்த முடிவு ஆனாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தகவலை தலைமை செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

    வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

     

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

     

    இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    • வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
    • விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரண மாக பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தின்போது நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.

    கடந்த வாரம் பாபநாசம் அணையில் இருந்து பாச னத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 கால்வாய்கள் மூலம் நிலப்பரப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் 93.30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து 1004 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

    தற்போது பாபநாசம், வி.கே.புரம், அம்பையில் தொடங்கி சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், கல்லிடைக்குறிச்சி, கோபால சமுத்திரம், மேலச்செவல், சீவலப்பேரி வரையிலும் விவசாயிகள் தங்களது வயல்களை நெல் சாகுபடிக்கு பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் தொழி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 3.5 மில்லிமீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.சிவகிரி, வாசுதேவநல்லூர், உள்ளாார், ராயகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக பிசான பருவ நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள னர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இந்த 2 இடங்களிலும் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாநகர பகுதியிலும் சாரல் அடித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 27 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், கழுகுமலை, சாத்தான்குளம் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை அடித்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமர்சனம் செய்பவர்கள் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.
    • ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    தமிழக இளைஞர்களை எல்லா நிலைகளில் இருந்தும் தகுதியுடைவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடலின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் இன்னைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்க்கனும். யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மூன்றரை ஆண்டுகளாக பல திட்டங்கள நிறைவேற்றி வருகிறோம். தேர்தலின்போது கூறிய உறுதி மொழிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்றிரண்டு உறுதி மொழிகளை வரும் காலத்தில் உறுதியாக நிறைவேற்றப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தொழிலில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றிருக்கிறது. தொலைநோக்கு அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக தண்ணீர் தேங்கியது. தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு அடுத்த நாள் தண்ணீர் இல்லாத அளவிற்கு மாற்றியது. இதை சில மீடியாக்கள் கடந்த வருடம் தேங்கிய மழை வெள்ளம் படத்தை போட்டு பார்த்தீர்களா, மழை வெள்ளம் தேங்கியிருக்கு எனப்போட்டன. திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதான் காரணம். அதனால்தான் யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய் கொண்டு இருக்கிறார்களே தவிர...

    விமர்சனம் செய்பவர்கள் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள். அதை பற்றியும் நாங்கள் கவலைப்படபோவதில்லை. எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.

    தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.
    • தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100 சதவீதம் இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.

    104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100 சதவீதம் இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,

    "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ×