என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father son death"

    • இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
    • உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.


    அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.

    அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.

    காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
    • இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் உயிரிழப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். காய்கறி வியாபாரி. இவரது மகன் தோயிப் நசீர் (வயது26). எம்.ஏ. பட்டதாரியான தோயிப், தனது தந்தைக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை நசீர் முன்வந்தார். இதையடுத்து தந்தை-மகன் இருவரும் அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.

    நசீரின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவரது மகன் தோயிப்புக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அறுவை கிச்சைக்கு பிறகு நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நசீர் பரிதாபமாக இறந்துவிட்டார். தந்தையிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப், அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் தோயிப்பும் பரிதாபமாக இறந்தார்.

    மகனுக்கு கல்லீரல் தானம் கொடுத்த நசீர், அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப் என தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் கொச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பவானி:

    சித்தோடு அடுத்த செல்லப்பம் பாளையம் மேட்டு காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 27). இவரது மகன் சபரி (5). தந்தை, மகன் இருவரும் சித்தோட்டில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் கோவை நெடுஞ்சாலை செல்லப்பம்பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தங்கராஜ் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். ரோட்டில் தந்தையும், மகனும் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

    மேலும் பொதுமக்கள் அந்த இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை- சேலம் நெடுஞ்சாலையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் விரைந்து சென்று மறியல் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் தடுத்தனர். உடல்களை எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘‘இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்போது 2 உயிர்கள் பறி போய் விட்டது. இந்த இடத்தில் சர்வீஸ் ரோடு போட வேண்டும். மேலும் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்று கூறினர்.

    இதற்கு போலீசார் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்துக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

    இதையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு போக்கு வரத்து சீரானது.

    ×