என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    அப்போது கஸ்தூரியிடம் குறுக்கிட்டு பேசிய பத்திரிகையாளர் ஒருவர், "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள்" என்று நீங்கள் பேசியதாக கூறினார்.

    அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அப்படி எதுவும் தான் சொல்லவில்லை என்று மறுத்து பேசினார். நேற்று தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு இன்று கஸ்தூரி அப்படி எதுவும் தான் பேசவில்லை என்று மாற்றிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கஸ்தூரி நேற்று தெலுங்கர்களை இழிவாக பேசிவிட்டு இன்று அப்படி பேசவே இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.
    • முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கார். ஆனால் இந்த தீர்மானங்களை பார்க்கும்போது நீங்கள் திமுகவுடன் சேர்ந்திடலாம் என்று தோன்றுகிறது.

    காரணம், திமுக இத்தனை நாட்களாக சில விஷயங்களை கிளி பிள்ளைப்போல் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அதையே இப்போது விஜய் சொல்கிறார். பாஜக சொல்லிக் கொண்டிருப்பதையே அவர் சொல்லி வருகிறார். இதை விரிவாக எடுத்துக்கூற எதுவும் எல்லை.

    திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.

    பாஜகவுக்கு எத்தனை பி டீம்ங்க.. தாங்காது கட்சி. முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    விஜய் எப்போ ஒன்றிய அரசு என்று சொன்னாரோ அப்போவே அவர் உங்க சித்தாந்தம்தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க, இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தெலுங்கு மக்களை இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமரியாதை செய்யவோ அல்லது புண்படுத்தவோ துணிந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசியல் சூழலில். தெலுங்கு சமூகத்தின் பெருமை மற்றும் மதிப்புகள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. மேலும் எங்கள் கவுரவத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

    என் தோழி நடிகை கஸ்தூரியின் கருத்து எல்லை மீறிவிட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த வித அவமரியாதையையும் தெலுங்கு சமூகம் பொறுத்துக்கொள்ளாது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். 

    • Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
    • அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.

    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.

    • சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும்.
    • விஜய் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார். திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.

    ஏன் தம்பி என்று சொன்னார் ? பிறகு ஏன் லாரியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் நான் சொல்லி தேவையில்லை.

    எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்காக நாம், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

    அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்துக் கொண்டு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பொருத்து இருந்து பார்ப்போம்.

    இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். எனவே, நிச்சயமாக வருங்காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
    • வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன்.

    சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்பேது அவர் கூறியிருபு்பதாவது:-

    தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

    தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறிவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்.

    மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவுபடுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர்.

    வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    சிறப்புத் திட்டத் தகுதிக்காக விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்பட மாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சில நடைமுறைகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த விதிகளின்படி அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நீர்நிலைகளின் எண்ணிக்கை மற்றும் பாசனப் பரப்பு குறைந்து வரும் நிலையில், இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்போதுள்ள குறைந்த அளவிலான நீர்நிலைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடும். இதை அனுமதிக்க முடியாது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.

    தமிழ்நாட்டின் இன்றையத் தேவை பாசனப் பரப்பை அதிகரிப்பது தான். அதற்கான புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கும் நீர்நிலைகளையும் தாரை வார்க்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
    • தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.

    மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.

    * கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

    * தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.

    * 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.

    * தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.

    * அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.

    * எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.

    * எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

    * அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
    • வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத் தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. இதேபோல் வாயு எங்கிருந்து கசிந்து வருகிறது, எந்த வகையானது என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. காலை முதல் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர்.

    அப்போது பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கினர். மேலும் பலருக்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டது. வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அதே பகுதி எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவிகள் நலமாக உள்ளனர்.

    இது பற்றி அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முருகன், போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிஸ், கிருஷ்ணராஜ் திருவொற்றி யூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிக்கட்டா தேஜா, மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பள்ளியை ஆய்வு செய்தனர்.

    மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன் சிலர் டாக்டர் கே. கார்த்திக் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு எந்த வகையானது, எங்கிருந்து கசிகிறது என்பது தெரியாததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது. இதையடுத்து பள்ளிக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ஏற்கனவே பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கினர். ஆனால் இந்த வாயு கசிவு குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. வாயு எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.

    இப்போது மீண்டும் பள்ளியை திறந்த போதும் வாயு கசிவால் மாணவிகள் மயங்கி உள்ளனர். வாயு கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் பள்ளியை திறக்க வேண்டும்.

    இதுபற்றி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    • இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
    • உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.


    அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.

    அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.

    காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.
    • நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

    எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.

    இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

    இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

    இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×