எனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக- கஸ்தூரி

தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன்.
எனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக- கஸ்தூரி
Published on

சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்பேது அவர் கூறியிருபு்பதாவது:-

தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறிவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்.

மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவுபடுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர்.

வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com