என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகை யில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி யிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
காலை நேரம் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் மதிய நேரம் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது சுனக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை நேரம் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி அளவில் 10.95 சதவீதமும், 11 மணி அளவில் 26.03 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 42.41 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 53.63 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 64.02 சதவீதமும் பதிவானது.
அதைத்தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலை விட 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முழுமை அடைந்தவுடன், ஓட்டு போட்ட வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. பதிவு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர மின் இணைப்புகள் முறைப்படி துண்டிக்கப்பட்டன.
பின்னர் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி. பேட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக் கொண்டனர். அப்போது படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டன.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் எண் வரிசைப்படி எந்திரங்கள் வைக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகமான ஸ்ரீகாந்த், தேர்தல் பொது பார்வையாளர் ஆகிய முன்னிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அறையின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பணி நள்ளிரவு வரை நடந்து அதிகாலை 4 மணியில் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் அடுக்கில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், 2-ம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாரும், 3-ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4-ம் அடுக்கில் உள்ளூர் போலீசார் என 400 போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனங்களுடன் முன்னெ ச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளைமறுநாள் (சனிக்கி ழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்குகிறது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு கிறது. 14 மேஜைகளில் 17 சுற்றுகள் வரை எண்ணப்ப டுகிறது. அன்று மதியம் முடி வுகள் அறிவிக்கப்படுகிறது.
- இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 905-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,930-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-02-2025- ஒரு கிராம் ரூ.107
04-02-2025- ஒரு கிராம் ரூ.106
03-02-2025- ஒரு கிராம் ரூ.107
02-02-2025- ஒரு கிராம் ரூ. 107
01-02-2025- ஒரு கிராம் ரூ. 107
- சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
- கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முறையாக சொத்துவரி செலுத்தாத நபர்களுக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
- போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.
- மதுரை ஐகோர்ட்டு, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
- பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
- சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன.
சென்னை:
வடகிழக்கு மாநிலங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மத்திய வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் சார்பில் வர்த்தகம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் அந்த துறைக்கான மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை நகரின் வளர்ச்சி மிக அபரிமிதமானது. சென்னை, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் உலக அளவில் மிக சிறப்பாக செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் அளவுக்கு அதன் பங்கு உள்ளது. ஏற்கனவே இருந்த டெட்ராய்ட் நகரம் இப்போது காணாமல் போய் விட்டது. சென்னை தான் உலகின் புதிய டெட்ராய்ட் நகரமாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் உலகளவில் சிறப்பாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆண்டுக்கு திறன் மிகுந்த 50 ஆயிரம் என்ஜினீயர்களை உருவாக்குகிறது. மிக முக்கியமாக அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சென்னை தன்னிறைவு அடைந்துள்ளது. அதிகளவில் ரிங் ரோடும், மெட்ரோ ரெயிலும் உள்ளது. நகர வளர்ச்சியில் சென்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு 'ரோல் மாடல்' ஆக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன. அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 15 ஆயிரத்து 600-ம், 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு கிராம சாலைகளும் போடப்பட்டுள்ளன.
அதேபோல் 9 விமான நிலையங்கள், 17 விமான நிலையங்களாகி உள்ளது. ரூ.81 ஆயிரம் கோடி செலவில் 19 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 65 ஆண்டுகள் பெறாத இந்த வளர்ச்சியை, வடகிழக்கு மாநிலங்கள் 10 ஆண்டுகளில் பெற்று இருப்பதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- ஜோதி நகர், மகாமேரு நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவேற்காடு: குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாள் அகரம் சாலை, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர். நகர், திருமலை பாலாஜி நகர்.
செந்தூர்புரம்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
போரூர்: கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீ புரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம்- விக்னேஸ்வரா நகர், ஹிமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.
செங்குன்றம்: ஜோதி நகர், மகாமேரு நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தலைவர் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை:
கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு சிறுமி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 13–19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இது 2023-ம் ஆண்டை விட சுமார் 35 சதவீதம் அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம் குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாக செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை.
பெண் குழந்தைகள் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை எதையும் தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஒருபுறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம்; மற்றொரு புறம், அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க. அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு கடும் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் கன்னசேரிபுதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமலட்சுமி பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.
- 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் கைது.
- 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், "பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்,
ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.
- கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.
அப்போது நடந்த கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.
யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள், தனித்தனியாக விசாரித்துள்ளனர்.
சிறுமிகள் தெரிவித்த பகீர் பாலியல் தொல்லை புகார்கள் மீது தீவிரமாக விசாரணை நடத்தியதில், பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாலியல் தொல்லை அளித்த அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்படி, பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூற, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), மு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
- திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதைதொடர்ந்து, பேசிய அமைச்சர் சேகர் பாபு, " வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை பாஜக ஏற்பட நினைக்கிறது என்றும் உறுதிமிக்க இரும்பு மனிதரான முதல்வர் எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார்" என்றார்.
மேலும், பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, " இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலமாக தமிழ்நாடு விலங்குகிறது. இதைப் பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்" என்று காட்டமாக கூறினார்.
இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நீதிமன்றம் நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியவுடன் தன்னெழுச்சியாக பக்தர்கள் போராடினார்கள். எங்களை 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம், ஒடுக்குவோம்' என்று சொல்கிறார்கள்.
அங்குப் போராடுபவர்கள் முருக பக்தர்கள். அவர்கள் மீது கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க. இனிமேல், 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று பேசினால், ரகுபதி இருக்கும் இடம், அவருக்கே தெரியாமல் போகும் .
திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






