என் மலர்
மத்தியப்பிரதேசம்
- 'சாந்தாரா' என்பது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு ஜெயின் மத துறவு சடங்காகும்.
- சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார்.
ஐடி நிபுணர்களான பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் ஆகியோரின் ஒரே மகளான வியானாவுக்கு, கடந்தாண்டு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் அந்த 3 வயது குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஜெயின் மத நம்பிக்கையின் மீது அக்குடும்பத்தின் கவனம் திரும்பியது
மார்ச் 21 அன்று, இந்தூரில் உள்ள ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை குழந்தையின் குடும்பம் சந்தித்தது. அப்போது இக்குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' வழங்கப்பட்டது. இது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு மத துறவு சடங்காகும்.
சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார். மூன்று வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், "எங்கள் மக்களுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை, ஆனால் குருஜி அவளுடைய நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி அதை பரிந்துரைத்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" தெரிவித்தார்.
இதன்மூலம் மிக குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு இது தெரியவந்துள்ளது.
வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் கூறினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நெட்டிசன்கள் மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று கூறி இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
- பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவருக்கும் அவருடைய தாயாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மைனர் பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.
மகள் காணாமல் போனது குறித்து அவருடைய பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மைனர் பெண் கடந்த 29-ந்தேதி ஷாதோல் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சமீர் என்பவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பி மைனர் பெண் அவருடன் சென்றார். ஒதுக்கப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
தொடர்ந்து சமீரின் உதவியாளர் உட்பட மேலும் 2 பேர் அங்கு வைத்து மைனர் பெண்ணை வன்கொடுமை செய்தனர். அன்று இரவு முழுவதும் அவர்கள் பெண்ணை அடைத்து வைத்திருந்தனர்.
மறுநாள் 30-ந் தேதி அதிகாலை ரெயில் நிலையம் அருகே விட்டு சென்று விட்டனர்.
அங்கு தவித்துக் கொண்டிருந்த மைனர் பெண்ணை அன்மோல் என்ற மற்றொரு வாலிபர் உதவி செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அவரும் அவருடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அங்குள்ள விடுதி அருகே விட்டு விட்டு சென்று விட்டனர்.
புர்ஹார் ஜெயிலில் துணை ஜெயிலராக பணியாற்றும் விகாஸ் சிங் என்பவர் அந்த வழியாக வந்தார். அவர் மைனர் பெண்ணை காரில் அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெண்ணை வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்தார்.
இதற்கிடையே மைனர் பெண் குறித்து போலீசார் துப்பு துலுக்கினர். அவர் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் பெண்ணை மீட்டனர்.
மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 நாட்களாக வன்கொடுமை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மைனர் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்த ஜெயிலர் விகாஷ் சிங் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- வேனில் இருந்தவர்கள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களை மீட்க கிணற்றில் இறங்கிய உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் வேன் கிணற்றில் விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பிற்பகல் மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள கச்சாரியாவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்தபோது வேனில் 10 க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இரு சக்கர வாகனம் மீது மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
வேனில் இருந்தவர்கள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். கிணற்றில் விஷ வாயு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க கிணற்றில் இறங்கிய உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
- ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.
- நாட்டின் மற்றும் அதன் குடிமக்களின் நற்பெயரை கெடுக்கவோ அல்லது அவதூறு செய்யவோ கூடாது.
அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மகாராஷ்டிரா தேர்தலில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர். மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது. ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.
நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை. தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் "ராகுல் காந்தி நாட்டை அவமதித்து விட்டார். காங்கிரஸ் கட்சி அவரை கட்டுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார். அவர் இதை செய்திருக்கக் கூடாது என தெரிவித்தேன். ஆனால் அது அவரது (ராகுல் காந்தியின்) விருப்பத்தைப் பொறுத்தது. அது ஒரு நபரின் குணமாக மாறும். நாம், நாட்டின் மற்றும் அதன் குடிமக்களின் நற்பெயரை கெடுக்கவோ அல்லது அவதூறு செய்யவோ கூடாது.
மற்ற நாடுகளில் உள்ள தலைவர்கள் இதுபோன்ற சூழ்நிலையை தங்களுடைய நாட்டிற்கு எதிராக அந்நிய மண்ணில் ஏற்படுத்தமாட்டார்கள். இது காங்கிரஸ் கட்சியின் மனநிலை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களுடைய தலைவரை கட்டுப்படுத்துவது அவசியமானது" என்றார்.
- உத்தவ் லால் ஜோஷி என்ற முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சிகிச்சைகாக வந்திருந்தார்..
- வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ஏப்ரல் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உத்தவ் லால் ஜோஷி என்ற அந்த முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
மற்ற அனைவரையும் போல வரிசையில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மருத்துவர் வந்து தன்னைத் தாக்கியதாக அவர் கூறுகிறார்.
அவர் ஊடகத்திடம் கூறியதாவது, ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என்று மருத்துவர் கூச்சலிட்டார். விளக்க முயற்சிக்கும்போது மருத்துவர் தன்னை தாக்கி வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால் அது மனித குலத்துக்கு அவமானம்.
- அப்படி வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்றார்.
இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் மந்திரியுமான இவர், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசியதாவது:
பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கூட தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும்.
அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- தண்ணீர் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி லட்சுமி கணவர் ஊருக்கு செல்ல மறுத்து விட்டார்.
- தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர்
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் திண்டோரி மாவட்டம் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள தேவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சோனி.
இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் முதல் 2,500 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே ஒரு குடிநீர் குழாய்தான் உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது.
இந்த குடிநீர் குழாய் அருகே காலை முதல் இரவு வரை மிகப்பெரிய கூட்டமே காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக லட்சுமியால் கணவர் வீட்டில் வாழ முடியவில்லை.
இதையடுத்து ஜிதேந்திரா சோனியை அவரது மனைவி லட்சுமி கைகழுவி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி வீட்டுக்கு சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு ஜிதேந்திரா சோனி எவ்வளவோ கெஞ்சி அழைத்து பார்த்தார். ஆனால் தண்ணீர் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி லட்சுமி கணவர் ஊருக்கு செல்ல மறுத்து விட்டார்.
இதையடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட ஜிதேந்திரா சோனி நினைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது ஊரில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்தும், அதனால் தன்னை மனைவி விட்டுச்சென்றது குறித்தும் கலெக்டரிடம் எடுத்துரைத்தார். இது தொடர்பாக ஜிதேந்திரா சோனி கூறியதாவது:-
என் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக என் மனைவி என்னை கைவிட்டுவிட்டார். அவர் எனது குழந்தைகளுடன் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். எனது மனைவி என்னை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். ஆனால் தண்ணீர் பிரச்சனையால் இந்த கிராமத்தில் எதிர்காலம் இல்லை என்று என் மனைவி கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர். பல குடும்பங்கள் அமைதியாக கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டன. எனவே எனது பிரச்சனைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜிதேந்திரா சோனியின் புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், 'தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. ஆனால் அதில் நீர் மட்டம் குறைந்துவிட்டது. எனவே பக்கத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் இணைப்புகளை வழங்குமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர்.
தேவ்ரா கிராமத்தில் உள்ள பழைய குடிநீர் குழாயை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் இணைக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நீர் வினியோகத்தை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் பிரச்சனையால் கணவனை கைகழுவி விட்டு சென்ற பெண்ணின் உதவியால் தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட உள்ளது.
- பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் 2 பேர் ஈடுபட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
- விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார்
- சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது மாமியாரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா. இவரது மனைவி நீலிகா. இவர்களுடன் விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரின் சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொண்டு அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவனை நீலிகா நச்சரித்து வந்துள்ளார்.
ஆனால் தாயின் உடல்நிலை கருதி விஷால் அதற்கு மறுத்துள்ளார். இதனால் விஷாலை மன ரீதியாகவும், உடல் ரீதியாவதும் நீலிகா துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
தடுக்க வந்த விஷாலின் தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்து மருமகள் நீலிகா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாக்கப்பட்ட தாயும் மகனும் நீலிகா குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
- பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது
மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.
மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.
அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் அவர் மீதுள்ள சந்தேகத்தினால் ஜபால்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதும், அவர் மீது ஐதராபாத்தில் ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமோ மாவட்டத்தின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் தீபக் திவாரி கூறுகையில், அவர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையினால் பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைதான் 7 எனவும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனுங்கோ கூறுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும், இது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, தப்பியோடிய அவரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.






