என் மலர்
இந்தியா
- இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
- படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
- இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
சென்னை:
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரும், கர்நாடக அணிகளும் மோதின.
- டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய ஷுபம் பண்டி சதமடித்து 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர்.
- மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒரு வணிக வளாகத்தில் இருந்து அந்தப் பெண் வெளியே வந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளது.
சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவாயிலுக்கு அருகில் அவரை மறித்த அந்தக் கும்பல், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, இனரீதியாக அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பெண்ணின் புகாரை அடுத்து வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இரண்டு இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்றாவது நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா, வடகிழக்கு இந்தியப் பெண்கள் தொடர்ந்து இத்தகைய இனப்பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திப்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
- மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
- கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
- ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.
நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.
பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.
ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- 2026-2027 கல்வியாண்டிற்காக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.
உத்தரப் பிரதேசத்தில் 13,000 அரசுப் பள்ளி பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிப்ரவரி 17 அன்று, பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் அரசுப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி, ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அண்டை மாவட்டமான லக்கிம்பூரில் அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
2026-2027 கல்வியாண்டிற்காக 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.
அவை சட்டவிரோதமாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவிருந்தது தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான ஷபீக் அகமது மற்றும் அலோக் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் சிங் மற்றும் பயிற்றுவிப்பாளர் அதுல் குமார் சிங் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பழைய பேப்பர் வியாபாரி மற்றும் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் லாரியில் பிடிபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.
- விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக் லக்னோவில் நீட் தேர்வு அழுத்தத்தால் 21 வயது இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
லக்னோவின் ஆஷியானா பகுதியில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வந்தவர் பிரதாப் சிங் (49). இவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகள் உடன் வசித்து வந்தார்.
தனது 21 வயது மகன் அக்ஷத்தை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி பிரதாப் சிங் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 20 அன்று வீட்டில் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்ஷத்தின் தங்கையும் அங்கு இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியால் அக்ஷத், வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.
மேலும் தங்களை கண் முன்னேயே உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உடல் பாகங்களைச் சதரோனா கிராமம் அருகே வீசிவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துள்ளார்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.
பிரதாப் சிங்கை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அக்ஷத்தின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
டிரம்மில் வைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்களை போலீசார் மீட்ட நிலையில் நேற்று அக்ஷத் கொலை வழக்கில் கைது செய்யபட்டார்.
- வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம்.
- இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
நத்தம்:
கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதை, அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
- 'கேரளம்' என்பதற்கு "தென்னை மரங்கள் நிறைந்த நிலம்" என்று அர்த்தம்.
'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.






