என் மலர்tooltip icon

    இந்தியா

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 6 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2-வது நாளாக அதேஅளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு எரிமலை வெடித்து சிதறியது.
    • பல கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை சூழ்ந்ததால் விமான போக்குவரத்து பாதிப்பு.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்துள்ளது. தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை குமுறிக் கொண்டிருந்த நிலையில், நேற்று வெடித்துள்ளது.

    இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிறைந்த கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

    இந்த கரும்புகை டெல்லியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இன்று இரவு 7.30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எரிமலையின் சாம்பல் புகை செங்கடல், அரேபிய தீபகற்பம் ஆகியவற்றை தாண்டி இந்திய துணைக் கண்டத்தை அடைந்துள்ளது.

    ஏற்கனவே காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைந்து வந்த நிலையில், தற்போது இந்த மேகமும் சேர்ந்த மோசமாக்கியுள்ளது. ஆனால், கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலத்திலும் இந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.

    முன்னெச்சரிக்கை காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

    • டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
    • கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
    • முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.

    மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பைதாபூர் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றனர்.

    தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக அதை வெளிக்காட்டவில்லை.

    ஆனால் திருமண சடங்குகள் நடைபெற்ற போது மணமகன் கண்ணாடியை கழற்றிய போது தான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையறிந்த மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியது.

    • தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.93 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160

    23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680

    20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-11-2025- ஒரு கிராம் ரூ.171

    23-11-2025- ஒரு கிராம் ரூ.172

    22-11-2025- ஒரு கிராம் ரூ.172

    21-11-2025- ஒரு கிராம் ரூ.169

    20-11-2025- ஒரு கிராம் ரூ.173

    • விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    வருகிற 27-ந்தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் விஜயை நேரில் சந்தித்ததாகவும், காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் என்ன பதவி அளிப்பது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
    • வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    குமரிக்கடல் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது உண்மையா? அல்லது வதந்தியா? என தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்- தலைமை நீதிபதி.

    இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

    பதவி ஏற்ற முதல் நாளிலேயே 17 வழக்குகளை விசாரித்துள்ளார். அத்துடன், வழக்குகளை வாய் மொழியாக தெரிவிக்கக்கூடாது. வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    நேற்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, முறையாக தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுக் கொண்டார். அதன்பின் மதியம் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இரண்டு மணி நேரத்தில் 17 வழக்குகளை விசாரித்தார்.

    மதியம் உச்சநீதிமன்றம் வருகை தந்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் பாரம்பரிய நீதிமன்ற அறை எண் ஒன்றில் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார்.

    • காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

    இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-

    காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அசோகா தெரிவித்தார்.

    கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    ×