
நறுக்கிய வாழைப்பூ - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
காயந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - கால் கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
வாழைப்பூக்களை உதிர்த்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
காய்ந்த மிளகாயையும் தனியாக நீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் பருப்பு வகைகளுடன் மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசிறாக அரையுங்கள்.
பின்னர் மாவு கலவையுடன் வாழைப்பூவை கொட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.