என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
- பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.
பாட்னா:
பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.
நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.
எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.
- சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
- லோகா திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.
வசூலில் முதல் இடத்தை பிடித்த மோகன்லால் நடித்த எம்புரான் படத்தை வெளியாகி 24 நாட்களில் லோகா திரைப்படம் தாண்டி மலையாள சினிமா துறையில் அதிகம் வசூலித்த திரைப்பட அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், லோகா திரைப்படம் விரையில் OTT-ல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர்," போலிச் செய்திகளை புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்" என்றார்.
- நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
- நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.
தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.
நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.
அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.
விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.
நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.
ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.
ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், "ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
- இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.
- பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் 'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 127 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா இலக்கை 15.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபேவும் பலம் சேர்க்கிறார்கள்.
ஓமனுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 15-வது ஓவரில் ஹமாத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இந்திய அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் தெரிவித்தார். இந்த தொடரில் இதுவரை 3 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அக்ஷர் பட்டேல் ஆட முடியாமல் போனால் அணிக்கு இழப்பாகும்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி (ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இந்தியாவுக்கு எதிராக) தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் பஹர் ஜமான், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், சகிப்சதா பர்ஹான், பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த அணியின் மிடில் வரிசை தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக 'டாஸ்' போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. இந்த சம்பவம் ஆட்டம் முடிந்ததும் சர்ச்சையாக வெடித்தது. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.
கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சனை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பரம எதிரிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறும் இந்த ஆட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழலில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணாஅல்லது அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
- அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் புதிதாக H-1B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
- H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது.
இந்த பயணத்தின்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாக இரு நாடுகளும் தெரிவித்தன. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.
- ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
- ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.
- அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும்.
- எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், H-1B விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூபாயில் சுமார் 88 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் குடும்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் வழியாக மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம். அமெரிக்க அதிபர்கள் இதை கருத்தில் கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதையும், அமெரிக்க பணியாளர்கள் மாற்றம் இல்லை (Replace) என்பதை உறுதி செய்யும். எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. இதுதான் நடக்கப்போகிறது என்பதை இது மிகவும் இறுதி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
படத்தின் டிரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
அதன்படி, கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
- நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள்.
- அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர்.
திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
கேள்வி கேட்கிறான் என்று நினைக்கிறாதீர்கள். தீர்வை நோக்கி போவதுதான் தவெக-வின் லட்சியம். தேர்தல் அறிக்கையில் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுப்போம். பொய்யான தேர்தல் அறிக்கைய கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வோம். எது உண்மையோ அதை மட்டுமே சொல்வோம். செய்வோம்.
ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி இதுதான் த.வெ.க.வின் மிஷன்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள். அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர். இது என்ன சும்மா கூட்டமா? தொண்டர்கள் TVK TVK என கரகோஷம் எழுப்ப கோடான கோடி நன்றிகள் எனத் தெரிவித்தார்.
- ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம்.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.






