மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தலாம்: H-1B விசா கட்டணம் உயர்வுக்கு இந்தியாவின் ரியாக்ஷன்..!

அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும்.எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை.
மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தலாம்: H-1B விசா கட்டணம் உயர்வுக்கு இந்தியாவின் ரியாக்ஷன்..!
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், H-1B விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூபாயில் சுமார் 88 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் குடும்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் வழியாக மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம். அமெரிக்க அதிபர்கள் இதை கருத்தில் கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதையும், அமெரிக்க பணியாளர்கள் மாற்றம் இல்லை (Replace) என்பதை உறுதி செய்யும். எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. இதுதான் நடக்கப்போகிறது என்பதை இது மிகவும் இறுதி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com