search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியூஷ் கோயல்"

    • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

    நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

    "வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

    10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

    • கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார்.
    • இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார்.

    இதுதொடர்பாக பியூஷ் கோயல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பதவி வகிப்பது மற்றும் டெஸ்லாவின் விநியோக சங்கிலியில் வளர்ந்து வரும் இந்திய தானியங்கி பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சுட்டிக் காட்டினார்.

    மேலும், இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது. எலான் மஸ்க் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டார்.

    இந்நிலையில், பியூஷ் கோயலுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட செய்தியில், டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கவுரவம் அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு என்னால் வர முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். வரும் காலத்தில் உங்களை சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது.
    • அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அவினாசி:

    தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும், மத்திய பா.ஜ.க., அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி னார். தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடை பயணத்தை செப்டம்பர் 27-ந்தேதி நிறைவு செய்தார்.

    2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்க இருந்தார். ஆனால் மிலாடி நபி காரணமாக மேட்டுப்பாளையத்தில் நடக்க இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரது டெல்லி பயணம், உடல்நலக்குறைவு காரணமாக அவரது நடைபயணம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டு, இன்று 16-ந்தேதி அவினாசியில் இருந்து தொடங்கும் என தமிழக பா.ஜனதா தலைமை அறிவித்தது. அதன்படி இன்று காலை 11மணிக்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் இருந்து தனது 3-ம் கட்ட நடை பயணத்தை அண்ணாமலை தொடங்கினார். மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி பியூஸ்கோயல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    அவிநாசி சேவூர் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை , அவிநாசி தாலுகா அலுவலகம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி , பி.எஸ். சுந்தரம் வீதி வழியாக சுமார் 2 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று அவினாசி புதிய பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.

    அவிநாசியில் நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்ட வாறும் நடந்து சென்றார்.

    அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர். வியாபாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நேரிடையாக கேட்டறிந்ததுடன் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அண்ணாமலையை வரவேற்று அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் வரவேற்பு வளையங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கொங்குநாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நடனம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலை நடைபயணத்தால் அவிநாசி பகுதியானது களை கட்டியது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் நடைபயணத்தை முடித்து கொண்டு காரில் மேட்டுப்பாளையத்திற்கு அண்ணாமலை செல்கிறார்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி முன்பு அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.அவருக்கு மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பா.ஜ.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக 2 அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கிறார்.மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார். அவினாசி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

     அவினாசி, மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, நாளை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூரிலும், 18-ந்தேதி பவானிசாகர், கோபி செட்டிபாளையத்திலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.19-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம், சூலூரிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25-ந் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி யிலும் நடைபயணம் செல்கிறார்.26-ந்தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கிலும், 27-ந்தேதி சங்ககிரி, குமாரபாளையம், 28-ந்தேதி நாமக்கல், திருச்செங்கோட்டிலும் நடை பயணம் மேற் கொள்கிறார். அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலை இன்று முதல் மேற்கொள்ளும் 3-ம் கட்ட நடைபயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
    • இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது.

    மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல், நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் மத்திய அரசின் முயற்சியாக 'பாரத் தால்' (Bharat Dal) என்ற பெயரில் மானிய விலையில் கடலை பருப்பை, ஒரு கிலோ பாக்கெட் ரூ.60க்கும், 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.55 எனும் விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

    தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பருப்பு தற்போது டெல்லி-தேசிய தலைநகர சாலையில் (National Capital Road) விற்கப்படுகிறது.

    இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), கேந்திரிய பந்தர் மற்றும் மதர் டெய்ரியின் 'சஃபல்' ஆகிய சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.

    இந்த நடவடிக்கையானது, உயர்ந்து வரும் விலைவாசியினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்திடம் உள்ள பருப்பு வகைகளின் கையிருப்பிலிருந்து நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

    NAFED மற்றும் டெல்லி-NCRல் உள்ள அதன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும், NCCF, கேந்திரிய பந்தர் மற்றும் சஃபல் ஆகியவற்றின் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் கடலை பருப்பு கொள்முதல் செய்து, பேக்கேஜிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    இந்த ஏற்பாட்டின் கீழ், கடலை பருப்பு, மாநில அரசுகளுக்கு அவர்களின் நலத்திட்டங்கள், காவல்துறை, சிறைகள் மற்றும் அவர்களின் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கவும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது. இதை நாடு முழுவதும் பல வடிவங்களில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஊற வைத்தும், வறுத்தும் பல வகைகளில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாகவும் இது உபயோகிக்கப்படுகிறது.

    கடலை பருப்பில் மனித உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சோகை மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், மன ஆரோக்கியத்திற்கும் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம், பீட்டா கரோட்டின் மற்றும் கோலின் ஆகியவை அதிகளவில் நிறைந்திருப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், "பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத் தொடங்கியவுடன் விலை குறையும். அதேசமயம் கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது பெரிய வித்தியாசம் இல்லை. உருளைக்கிழக்கு மற்றும் வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது" என்றார்.

    • இந்தியாவில் 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைய உள்ளன.
    • இதில் முதல் ஜவுளி பூங்கா என்ற பெருமையை விருதுநகர் ஜவுளி பூங்கா பெற்றுள்ளது.

    சென்னை:

    பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) தமிழகத்தின் விருதுநகரில் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:

    இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மெகா ஜவுளி பூங்காவை பெற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது.

    விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளிக்கான நூலை உருவாக்குவது, ஆடையாக உருவாக்குவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது என ஜவுளித்துறை பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. அதுவும் வெவ்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே இடத்தில் கொண்டு வரும்போது ஆடையை உருவாக்குவதற்கான செலவு வெகுவாகக் குறையும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

    இதனை கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 7 பூங்காக்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி முதலீடுகளை பெறமுடியும். இதுதவிர 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஜவுளி பூங்கா அமைய இருப்பது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

    அதேபோன்று, இந்த ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியையும், என்னையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு மாதமும் ரேசன் மூலம் விநியோக்க 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை.
    • உத்தரபிரதேசம், பீகாரில் உணவு தானிய உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்யாத நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 கோடி மக்கள் அரிசி, கோதுமையை பெற்று வருகிறார்கள். அந்தியோதயா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படுகிறது.

    கூடுதல் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை. ஒரு வருடத்தில் தேவை 108 லட்சம் டன்களாகிறது. ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை இலவசமாகப் பெறுகிறார்கள். அரிசியின் விலை சீராக உள்ளது, எனவே உணவு தானிய ஏற்றுமதியை அரசு நிறுத்தவில்லை. செப்டம்பர் வரை, முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
    • தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது.

    கலிஃபோர்னியா:

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது கடைசி நிகழ்ச்சியாக தெற்கு கலிஃபோர்னியா நகரின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதார வரிசையில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தால், 2047-ல் இந்தியா 35 முதல் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

    இது இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது இந்தியா விரைவில் வளர்ந்த நாடாகும். இந்தியா இன்று வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது. 


    மக்கள் தொகையின் பங்கும், ஆர்வமுள்ள இளைஞர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பை வழங்கும் கூடுதல் ஆதாயமாக உள்ளன. தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறி வருகிறது. 2030-க்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய நாங்கள் விரும்புகிறோம்.

    உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தால், கோடிக்கணக்கான இந்திய கைவினை கலைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது.
    • வர்த்தகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமைத் தன்மை அவசியம்.

    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற வியாபாரிகள் சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பேசியதாவது:

    இந்தியாவை இப்போது பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக உலகம் பார்க்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்தியப் பொருளாதாரம் பலவீனமானதாகக் கருதப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் இருந்தது.

    இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன. வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வணிகம் செய்ய வேண்டியதன் அவசியம்.

    வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்க அரசுடன் இணைந்து வர்த்தகர்கள் பணியாற்று வேண்டும். நெறிமுறை வர்த்தக நடைமுறைகளை அவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
    • வர்த்தக, தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டு ஏப்ரலில் பியூஷ் கோயலின் எம்.பி.க்கான பதவி காலம் நிறைவடைந்தது. இதன்பின் கடந்த 8-ம்தேதி கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் 27 பேர் புதிதாக ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக கோயல் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாராளுமன்ற மேலவையின் தலைவராக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம், ஜவுளி துறைக்கான மந்திரி பியூஷ் கோயல் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அவரை பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபைக்கான விதிகளின்படி நியமனம் செய்துள்ளார். இதுபற்றி ராஜ்யசபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறிய மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் ஜெட்லி மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை பியூஷ் கோயல் அவரது துறைய கவனித்து கொள்வார். #CabinetReshuffle
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறிய மாற்றம் செய்துள்ளார். நிதி மந்திரி அருண் ஜெட்லி அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நிதித்துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி ராணி வசமிருந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் வசம் அளிக்கப்பட்டுள்ளது. 

    சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம் வசமிருந்த மிண்ணனுவியல் துறை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அலுவாலியாவுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
    ×