என் மலர்
இந்தியா

பிரச்சனைகளை பேசித் தீர்க்க நாளை அமெரிக்கா விரைகிறது பியூஷ் கோயல் தலைமையிலான குழு!
- H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது.
இந்த பயணத்தின்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாக இரு நாடுகளும் தெரிவித்தன. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.






