search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்த காட்சி)
    X
    சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்த காட்சி)

    திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

    திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
    திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஷ்வரி, மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×