என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய, விடிய அபிஷேகம்
Byமாலை மலர்24 Aug 2020 9:16 AM GMT (Updated: 24 Aug 2020 9:16 AM GMT)
தஞ்சை மாவட்டம் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் சாட்சிநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவன் சாட்சிநாதராக, கரும்படு சொல்லியம்மையுடன் அருள்பாலித்து வருகிறார். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் விநாயகர், பிரளயம் காத்த விநாயகராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கிருதயுக முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது சிவபெருமானின் ஆணையின்படி விநாயகர் பிரளயத்தை அடக்கினார்.
பிரளயத்தை அடக்கிய விநாயகரை வருண பகவான் கடலில் கிடைக்கும் நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். இவரே பிரளயம் காத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விநாயகருக்கு தேனால் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகமும் ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு விடிய, விடிய நடைபெறும்.
இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேன் அபிஷேகத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விநாயகர் சதுர்த்தியான நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடந்தது.
பிரளயத்தை அடக்கிய விநாயகரை வருண பகவான் கடலில் கிடைக்கும் நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். இவரே பிரளயம் காத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விநாயகருக்கு தேனால் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகமும் ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு விடிய, விடிய நடைபெறும்.
இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேன் அபிஷேகத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விநாயகர் சதுர்த்தியான நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X