search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந்தேதி தொடங்குகிறது

    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    காலை 6 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம், தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகளும், 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 9-ந் தேதி 3-ம் கால யாக சாலை பூஜையும், 10-ந் தேதி காலையில் 4-ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    11-ந் தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் டாக்டர் இசக்கியாபிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×