என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
குலசேகரன்பட்டினத்தில் கந்தூரி விழா: யானையில் கொடி ஊர்வலம்
Byமாலை மலர்5 Feb 2022 3:50 AM GMT (Updated: 5 Feb 2022 3:50 AM GMT)
குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றமும், மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இரவு கொடியேற்றமும், மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா நாட்களில் மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
வருகிற 14-ந் தேதி இரவு 11 மணிக்கு மார்க்க சொற்பொழிவு, இரவு 1 மணிக்கு சந்தனம் பூசுதல், அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து துவா ஓதப்படும். 15-ந் தேதி இரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம், காலையில் வீடு தோறும் தப்ரூக் வழங்கல் நடைபெறும். 16-ந்தேதி தப்ரூக் வழங்கல், 17-ந் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை விளக்கேற்றுதல், 18-ந் தேதி கொடியிறக்கமும், தப்ரூக் வழங்கலும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் கந்தூரி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இரவு கொடியேற்றமும், மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா நாட்களில் மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
வருகிற 14-ந் தேதி இரவு 11 மணிக்கு மார்க்க சொற்பொழிவு, இரவு 1 மணிக்கு சந்தனம் பூசுதல், அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து துவா ஓதப்படும். 15-ந் தேதி இரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம், காலையில் வீடு தோறும் தப்ரூக் வழங்கல் நடைபெறும். 16-ந்தேதி தப்ரூக் வழங்கல், 17-ந் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை விளக்கேற்றுதல், 18-ந் தேதி கொடியிறக்கமும், தப்ரூக் வழங்கலும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் கந்தூரி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X