search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தூரி விழா"

    • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

    தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

    கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பஜார் சாலையில் உள்ள துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. 7-வது நாளான நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெரிய தெரு, புதுத்தெரு, பஜார்ரோடு, தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்கள் வழியாக யானை மீது பச்சை களை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து சந்தனக் கூடும் நடைபெற்றது.

    இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மவுலதுசரீப் ஓதி நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் பசுலுதீன், தர்கா பரம்பரை ஹக்தார் அனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஜாம்புவானோடையில் பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று அதிகாலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாதஸ்வரம் மங்கள இசையுடன் மத ஒற்றுமை எடுத்துக்காட்டாக தொடங்கியது.

    பின்னர் மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிப்பாடுகள் பிராத்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர் புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பூக்களால் ஆன புனித கொடி சுமந்த பல்லாக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், குதிரை, ஒட்டகங்கள் பேண்டு வாத்தியகங்கள், தப்ஸ் கச்சேரி, வண்ணத்துப்பூச்சி கலைஞர்களின் நடனங்கள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் கோரையாறு பாலம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது.

    அங்கு ஆட்டோ சங்கம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுவேங்கும் வியாபாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பழைய பேரூந்து நிலையத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறு பாலம், ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது.

    பின்னர் தர்கா அருகில் உள்ள அம்மா தர்கா, ஆற்றாங்கரை பாவா தர்கா சென்று மீண்டும் தர்காவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் துவங்கியது.

    சிறப்பு துஆ ஓதி அதனைத்தொடர்ந்து சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கந்தூரி விழா துவங்கியது. இதில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.

    கந்தூரி விழாவின் முக்கிய விழாவான வரும் 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

    • கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.
    • அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் மகான் பாதுஷா நாயகம் கண்ட பல்லாக்கு ஒலியுல்லா

    100- வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கொடி பல்லாக்கு ஒலியுல்லா தர்கா சென்று கொடியேற்றம் நடந்தது. இதில் கிழக்கு பள்ளி தலைவர் சேகுதாவது, மேற்கு பள்ளி தலைவர் பக்கீர் அலி, அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரியமிக்க கந்தூரி விழாவில் 100 கிடாய்கள் வெட்டி கறி விருந்து நடந்தது.
    • வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்த னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் முகம்மது நபி யின் பிறந்த நாளான மீலாது நபி நிகழ்ச்சியின் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி மாபெரும் பாரம் பரிய கந்தூரி விழாவான கறிவிருந்து படைக்கும் நிகழ்ச்சி வீரசோழன் பெரிய பள்ளி வாசலில் வெகு விம ரிசையாக நடைபெற்றது.

    சுமார் 100-க்கும் மேற் பட்ட கிடாய்கள் வெட்டி படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 சிப்பம் அரிசி மூட்டை களை சாதமாக தயாரித்து நடைபெற்ற இந்த மாபெரும் கந்தூரி விழா கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டு பசியாறி மகிழ்ந்தனர்.

    மேலும் இந்த கறி விருந் திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், குடல்கள், ஈரல்கள், தோல் கள் மற்றும் கால்கள் ஆகி யவை பாரம்பரிய கந்தூரி விழா நிகழ்ச்சி முறைப்படி ஏலம் விடப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சிக் காக அனைத்து சமுதாயத்தி னருக்கும் முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் மீலாது நபி நிறைவு நாளை முன்னிட்டு சுமார் 200 ஆண்டு கால பாரம்பரியமாக சிறந்து விளங்கி வரும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சி யானது முஸ்லீம் பெருமக்க ளின் பள்ளிவாசல் சிறப்பு தொழுகைக்கு பின்னர் அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கியது.

    இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சியில் ஜாதி, மத, பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிடாய் கறிவிருந்தில் கலந்து கொண்டு உணவை உண்டு பசியாறினர். மேலும் டோக் கன் முறையில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப் பட்ட இந்த உணவை பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்தனர்.

    • 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 18-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கலிய கிராமத்தினரின் கொடி ஊர்வலமும், வெள்ளையபுரம் வட்டானம் ஜமாத்தார் மற்றும் கிராமத்தினர் ஸ்தானிகன்வயல் மாணவநகரி கிராமத்தினரின் ரத ஊர்வலமும் மருங்கூர், எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம் ஜமாத்தார் கிராமத்தினர் சார்பில் கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் பாசிப்பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனர்.

    இவர்களை தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க தர்காவிற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கொடியை பொதுமக்கள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினரின் முயற்சியால் கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் விழா கமிட்டியை சேர்ந்த முஸ்தபா கமால், சேகனா துரை, அசரப்அலி, அமீர்கான், ஊராட்சி தலைவர் உம்மு சலீமாநூருல் அமீன், ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கீதா ராஜாராம் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

    வருகிற 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் விருந்து நிகழ்ச்சியும், இரவு மவுலீது ஓதி நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 2-ந் தேதி மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும், 10-ந் தேதி இரவு தலைக்கிழமை, 18-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒலியுல்லாஹ் பேரர்கள், விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 1-ந்தேதி மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி இரவு மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து 10-ந் தேதி இரவு தலை கிழமை நிகழ்ச்சியும், 18-ந் தேதி மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவின் 122-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதிகாலையில் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஊர்வலமாக எடுத்து வந்து தர்காவை 3 முறை வலம் வந்த பின்னர் மகான் செய்யதலி ஒலியுல்லா சமாதியில் சந்தனம் பூசப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவுலீது ஓதப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று பகலிலும் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த சந்தனக்கூடு திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    வரும் 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, இக்மத், செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, சீனிமுஸ்தபா, பசீர், களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், சீனிசேகு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீத், ஜாகிர் உசேன், முகமது உசேன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிங்கம் பசீர், அஸ்கர்அலி, அப்துர்ரகீம், பயாஸ்கான், சீனிபீர், பாலு, சொக்கலிங்கம், ரவி, சேகர், பஞ்சமுத்து, பஞ்சவர்ணம், காயாம்பு, கார்த்திகை செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது.
    • ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்பு தர்கா மினராவில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது. ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், இக்மத், சாகுல் ஹமீது, செயலாளர் ஹபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீத், பொருளாளர் சகுபர்சாதிக், தொழில் அதிபர் சிங்கம்பஸீர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது. துல்ஹஜ்ஜூ பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டது.

    வியாபாரிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக காணிக்கை பொருட்களை அந்த தொட்டில் பந்தலில் கட்டினர். 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    வருகிற 21-ந்தேதி மாலை சின்ன ஆண்டவர் சாமதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், இரவு தர்கா அலங்கார வாசலில் இருந்து பூகலேபு ஊர்வலம் புறப்படும்.

    இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டுஆப் டிரஸ்டிகள் செய்துவருகின்றனர்.

    • சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
    • ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர். கடந்த 13-ந் தேதி திருவிழா முடிவடைந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சையாக நெய்சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் தலைமையில் தர்கா அக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

    • ஜூலை 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா ஊர்வலம் நடைபெறுகிறது.
    • ஜூலை 5-ந்தேதி பிற்பகல் பகல்கூடு நடைபெற உள்ளது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. 122-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் பகல்கூடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியினர் அனைத்து சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    ×