search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லாங்-ஆன் போங்கள் என்ற ஹர்திக்.... அலைக்கழிக்கப்பட்டாரா ரோகித்?...
    X

    லாங்-ஆன் போங்கள் என்ற ஹர்திக்.... அலைக்கழிக்கப்பட்டாரா ரோகித்?...

    • ரோகித் சர்மா பொதுவாக ஸ்லிப், மிட்ஆஃப், மிட்ஆனில் பீல்டிங் செய்வார்.
    • நேற்று லாங்ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ரோகித் சர்மா மனைவி அணி நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்கூட தெரிவித்திருந்தார்.

    மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை நீக்கியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கான முகாமில்தான் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றைய போட்டியின்போது ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை அலைக்கழித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

    பொதுவாக ரோகித் சர்மா ஸ்லிப், மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் திசையில்தான் பீல்டிங் செய்வார். அவரது உடல்வாகு பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய ஒத்துழைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் ரிவியூ கேட்க வேண்டுமென்றால் வசதியாக இருக்கும் என்பதால் அருகில் நிற்பார்.

    ஆனால் நேற்று பெரும்பாலும் லாங்-ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்ததை பார்க்க முடிந்தது. கடைசி ஓவர் கோட்ஸி வீசினார். இந்த ஓவரின்போது திடீரென ஹர்திக் பாண்ட்யா லாங்-ஆன் திசையில் நின்ற பீல்டரை அருகில் அழைத்தார். மிட்-ஆன் அருகில் நின்றிருந்த ரோகித் சர்மாவை லாங்-ஆன் திசைக்கு போகும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது ரோகித் சர்மா தன்னை எங்கே போகச் சொல்வார் என சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவை அழைத்து நீங்கள் அங்கே செல்லுங்கள் என்பதுபோல் சைகை காட்டுவார். அதற்கு ரோகித் சர்மா, நானா... எனக் கேட்க, ஹர்திக் பாண்ட்யா நீங்கள்தான்... என வலியுறுத்துவார். உடனே ரோகித் சர்மா சற்று புன்னகையுடன் லாங்ஆன் நோக்கி ஓடுவார்.

    இதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ரோகித் சர்மாவை அலைக்கழிப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சஜகமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தபோது ரோகித் சர்மா பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டோருடன் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் அணி இரண்டு குழுவாக உள்ளதா? என ரசிகர்கள் முணுமுணுத்தனர்.

    பிசிசிஐ உடன் மோதல் போக்கை கடைபிடித்த இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×