என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
பட்டைய கிளப்பிய பஞ்சாப்- 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே
- சென்னை அணியில் துபே மற்றும் டோனி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- ரகானே களமிறங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டெரில் மிட்செல் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 32 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அடுத்து வந்த துபே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மொயின் அலி 17, சாட்னர் 11, ஷர்துல் தாகூர் 17, டோனி 0, என ஆட்டமிழந்தனர். இறுதி அதிரடி காட்டிய ஜடேஜா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்